- தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள்
- பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர், ஈரோட்டுச் சிங்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ் , வெண்தாடி வேந்தர், சுயமரியாதைச் சுடர், பெண்ணின போர் முரசு, புத்துலக தொலைநோக்காளர்
- தானே முயன்று கற்று சுயமாக சிந்தித்து அறிவார்ந்த கருத்துகளை வெளியிட்டவர் யார் ? - பெரியார்
- பெரியார் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது எது? - அவருடைய பகுத்தறிவுக் கொள்கை
- ஜாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவு படுத்துகிறது . அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்றவர் யார்? - தந்தை பெரியார்
- மதங்கள் என்பவை எதற்காக ஏற்படுத்தப்பட்டன? - மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கு
- கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடித்தவர் யார் ? - தந்தை பெரியார்
- சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த கருவியாக பெரியார் எதனைக் கருதினார்? - கல்வியை
- பள்ளிகளில் எதனை கற்றுத் தரக் கூடாது என்று பெரியார் கூறினார்? - அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களும்
- பள்ளிகளில் எத்தகைய கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று பெரியார் விரும்பினார்? - சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் கல்வியினை
- எதனால் சமுதாயம் விரைவாக முன்னேற்றம் என்று பெரியார் கருதினார் ? - பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால்
- மன பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும் மதிப்பெண்களுக்கும் முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார் .
- மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்குமான பகுத்தறிவு வளர்ச்சி நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்
- எந்த நூலில் அறிவியல் கருத்துகளும் தத்துவக் கருத்துக்களும், அனைவருக்கும் பொதுவான வகையில் இடம்பெற்றிருப்பதால் அது மதிப்புமிக்க நூலாக பெரியார் கருதினார்? - திருக்குறள்
- எந்த நூலை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார் பெரியார்? - திருக்குறள்
- எது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவி ஆகும் என்றார் பெரியார்? - மொழி
- நாட்டு விடுதலையை விட பெண் விடுதலை தான் முதன்மையானது என்று கூறியவர் யார்? - பெரியார்
- வேலைவாய்ப்பில் பெண்களுக்கு எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பெரியார் கூறினார்? - 50 விழுக்காடு
- எப்போது ஈவெராவுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? - 1938 நவம்பர் 13 சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில்
- தந்தை பெரியாரே தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்னை பாராட்டி பட்டம் வழங்கிச் சிறப்பித்தது யார்? - யுனெஸ்கோ நிறுவனம் (27/6/1970)
- பெரியார் தோற்றுவித்த இயக்கம் இது? - சுயமரியாதை இயக்கம் (1925)
- பெரியார் நடத்திய இதழ்கள் யாவை? - குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் ஆங்கில இதழ்
- வாழ்க்கை உறுதி பெற வேண்டுமென்றால் போட்டியிட்டு போரிட்டே ஆக வேண்டும் என்று கூறியவர் யார்? - நா பிச்சமூர்த்தி
- இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் நல் வாழ்க்கை தத்துவ உண்மைகளை காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்றவர் யார் ? - வல்லிக்கண்ணன் ( புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் நூலில்)
- மரபுக் கவிதையில் யாப்பு பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? - புதுக்கவிதைகள்
- பாரதியாரின் வசனகவிதை தொடர்ந்து புதுக் கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் யார்? -- ந பிச்சமூர்த்தி
- புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்? - பிச்சமூர்த்தி
- இலகு கவிதை. கட்டற்ற கவிதை. விலங்குகள் இல்லாத கவிதை. கட்டுக்குள் அடங்காத கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுவது எது? - புதுக்கவிதை
- ந பிச்சமூர்த்தி எந்த இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்? - அனுமன், மற்றும் நவ இந்தியா
- புதுக்கவிதை. சிறுகதை. ஓரங்க நாடகங்கள். கட்டுரைகள் என பல இலக்கிய வகைகளை படைத்தவர் யார்? - பிச்சமூர்த்தி
- நா பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது? - சயன்ஸ்க்கு புலி என்பதாகும்
- நா பிச்சமூர்த்தி கலைமகள் பரிசு பெற்ற வருடம் இது? - 1932
- நா பிச்சமூர்த்தியின் புனை பெயர்கள் யாவை? - பிஹூ , ரேவதி
- எந்த ஒன்றும் உருவாக வேண்டுமென்றால் உண்டும் வேண்டும்’ இல்லையும் வேண்டும் இந்தக் கருத்தைக் கூறும் கவிதையை படைத்தவர் யார்? - சீனக் கவிஞர் லாவோட்சு
- வெற்றிடமே நமக்கு பயன்படுகிறது என்ற பொருளை கவிதை இயற்றியவர் யார் ? - சீனக் கவிஞர் லாவோட்சு
- இல்லை என்பது வடிவத்தை வரையறை செய்கிறது என்று கூறியவர் யார்? - சீனக் கவிஞர் லாவோட்சு
- சீனக் கவிஞர் லாவோட்சு சமகாலத்தவர் யார்? - சீன ஞானி கன்ஃபூஷியஸ்
- சீனக் கவிஞர் லாவோட்சு எந்த சிந்தனை பிரிவைச் சார்ந்தவர் ? - தாவோவியம் சிந்தனை பிரிவு
- உலகத்தை மையமாக வைத்து சிந்தித்தவர் யார்? - சீன ஞானி கன்பூசியஸ்
- லாவோட்சு இன்றைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற சிந்தனையை முன் வைத்தார் இதை வலியுறுத்துவது - தாவோவியம்
- படுத்து என் போடுவதற்கு மட்டும் இதில் வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்தவும் உதவுவது எது ? - இலக்கியங்கள்
- ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? - யசோதர காவியம்
- இதனை போக்க வேண்டும் என்று யசோதர காவியம் கூறுகிறது? - வெகுளி
- இதனை நோக்க வேண்டும் என்று யசோதர காவியம் கூறுகிறது? - ஞானம்
- எதனை காக்க வேண்டும் என்று யசோதர காவியம் கூறுகின்றது? - விரதம்
- யசோதர காவியம் மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பட்ட நூலாகும்? - வடமொழியிலிருந்து
- யசோதர காவியம் நூலின் ஆசிரியர் யார்? - ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை (சமண முனிவர் என்று கூறுவதுண்டு)
- யசோதர காவியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது? - யசோதரன் எனும் அவந்தி நாட்டு மன்னன் வரலாறு
- யசோதர காவியம் பாடல்களின் எண்ணிக்கையைக் கூறுக? - ஐந்து சருக்கம் 320 பாடல்கள் ( அல்லது) 330 பாடல்கள்
- பிள்ளை வளர்ப்பில் தாயுமானவர் ஆக அந்த ஒருவர் யார்? - நா முத்துக்குமார்
- தம் மக்கள் மெய்தீண்டல் உயிர்க்கு இன்பம் என்று கூறியவர் யார்? - திருவள்ளுவர்
- தீயை படித்து தெரிந்து கொள்வதை விட. கிண்டி கோயம்பேடு அந்த அனுபவம் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் என்று கூறியவர் யார்? - நா முத்துக்குமார்
- எதனால் இன்றைக்கு கடிதம் எழுதும் பழக்கம் பெரும்பாலும் இல்லாமல் போனது? - கைபேசியின் வரவினால்
- தாகூர் டிகேசி, வல்லிக்கண்ணன் பேரறிஞர் அண்ணாவும் வரதராசனார் அழகிரிசாமி கீ ராஜநாராயணன் எந்த வடிவில் இலக்கியங்களைப் அளித்துள்ளனர் ? - கடித வடிவில்
- இவை முதுகுக்குப் பின்னாலும் என்று கண்களை திறந்து வைக்கின்றன? - பயணங்களின் ஜன்னல்கள்
- மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது? -- யாப்பிலக்கணம்
- யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? - மூன்று வகைப்படும் (குறில் நெடில் ஒற்று)
- அசை எதனால் ஆனது? - எழுத்துக்களால் ஆனது
- அசை பிரிப்பது எதனை கணக்கிடுவது இல்லை? - ஒற்று எழுத்து
- பாடலின் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது எது? - சீர்
- இயற்சீர் வஞ்சியுரிச்சீர் என அழைக்கப்படுவது எது? ,- ஈரசைச் சீர்கள்
- வெண்சீர்கள் என்று அழைக்கப்படுவது எது ? - காய்ச்சீர்கள்
- இயற்சீர் வெண்சீர் மட்டுமே வரும் பா வகை எது? - வெண்பா
- நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதல் அசையும் பொருந்துவது எவ்வாறு அழைக்கப்படும்? - தளை
- பொருத்துக (தமிழரின் தன்னேரிலாத பண்புகள்)
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை - இல்லறம் உண்பது நாழி உடுப்பவை இரண்டே - எளிய வாழ்க்கைசெல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர்பார்த்த - உயர் பண்புகொள்வதுமே வளாக கொடுப்பதும் குறைவுபடாது - கொள்கை சிறப்பு களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - வீரம் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு - தூய அன்புயாதும் ஊரே யாவரும் கேளீர் - உலகப் பொதுமை
- வெற்றியைக் கொண்டாட தமிழர் வணங்கிய தெய்வம் எது? - கொற்றவை என்ற பெண் தெய்வம்
- எதனை உணர்த்த நடுகல் வழிபாடு செய்வது வழக்கத்தில் இருந்தது? - வீரத்தை உணர்த்த
- நல்லமர் கடந்த நாணுடை மறவர் என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? -- அகநானூறு (67)
- அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி என்னும் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது? - அகநானூறு
- வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? - தொல்காப்பியம் (புறத்திணை)
- பழங்காலத்தில் மேற்சட்டையை எவ்வாறு அழைத்தனர்? - கஞ்சுகம்
- பழங்காலத்தில் துணிதைப்பவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? - துன்னக்காரர்
- பழங்காலத்தில் ஐம்படைத் தாலி என்னும் கழுத்தணி அணிந்தவர்கள் யார்? - சிறுவர்கள்
- புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் - பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்கள் யாவை ? - புறநானூறு மற்றும் பெரும்பாணாற்றுப்படை
- சிறந்த வீர விளையாட்டுகளில் ஒன்று - ஏறு தழுவுதல் மற்றும் மற்போரிடல்
- இங்கு வாழ்ந்த மக்கள் மேடை அமைத்து இசை நாட்டியம் நாடகம் ஆகியவற்றை காண்பதே பொழுது போக்காகக் கொண்டிருந்தார்? - நகர்ப்புற மக்கள்
- அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு கலவையோடு பெறுகுவீர் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ? - சிறுபாணாற்றுப்படை
- இல்லறத்தாரின் தலையாய கடமைகள் என்ன? - விருந்தோம்பல் சுற்றம் தழுவல் வரியோர் துயர் துடைத்தல்
- இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் என்ன பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? - நற்றிணை
- முதுநாரை முதுகுருகு பெருநாரை பெருங்குருகு பஞ்சபாரதீயம் இசை நுணுக்கம் பஞ்சமரபு என்பவை எவ்வகை நூல்கள்? - இசை நூல்கள்
- பல்கேள்வித் துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர் சின்ன பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? - பட்டினப்பாலை
Tuesday, October 2
ஒன்பதாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் கேள்விபதில்கள்
ஏழாம் வகுப்பு தமிழ்
தமிழின் சிறப்புகள் கொல்லாமை - தமிழின் குறிக்கோள் பொய்யாமை - தமிழின் கொள்கை தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...
-
தனிநபர் தகவல் பிறப்பு திசம்பர் 10, 1878 இடம் தொரப்பள்ளி , சென்னை மாகாணம் , பிரித்தானிய இந்தியா ( இன்றைய தமிழ்நாட்டில் ) இந்தி...
-
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே - என்ற பாடல் வரிகள் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன் தமிழோவியம் என...
-
சிற்பக்கலை மனித நாகரிக வளர்ச்சியின் தொடக்கமாக கொள்ளக்கூடிய கலை என்னும் கலை? - சிற்பக்கலை வரலாற்றின் வாயிலாக இன்றும் வ...