Sunday, January 3

மனித உரிமைகள் (இந்திய அரசியலமைப்பு கேள்வி பதில்கள்)



  1. மனித உரிமைகளை உறுதி செய்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது எது?  மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கை (UDHR)

  2. 1893 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் நாள் எந்த இடத்திற்கு காந்தியடிகள் பயணம் செய்தபோது  ஓடும் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?  தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா செல்லும் வழியில் பீட்டர்மெரிட்ஸ்பார்க் என்ற இடத்தில்

  3. "இனம், பாலினம், தேசியம், இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையை பொறுத்து மாறுபடாமல் மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் மமாக இருக்கும் உரிமையை மனித உரிமையாகும் எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது" என்று வரையறுத்த அமைப்பு எது?  ஐநா சபை 

  4. மனித உரிமைகள் ஒவ்வொரு வருடமும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? டிசம்பர் 10

  5. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை சம்பாதிக்கவும் எதிர்காலத்தில் உலகப்போர் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பு அது?  ஐநா சபை (1945)

  6. ஐக்கிய நாடுகள் சபை தினம் எது?  அக்டோபர் 24

  7. மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பது எது?  உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை 

  8. தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து எப்போது யாரால் விடுதலை செய்யப்பட்டார்? 1990ல் F. W. D கிளார்க் என்பவரால் விடுதலை செய்யப்பட்டார் 

  9. மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் இது?  உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை

  10. 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 எங்கு நடைபெற்ற பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொதுச் சபை தீர்மானம் 217A) பேரறிக்கை அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக பொது மக்களின் சாதனையாகும்?  பாரிசில் நடைபெற்றது 

  11. மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய போர் அறிக்கையில் எத்தனை உறுப்புகள் உள்ளன?  30 உறுப்புகள் 

  12. சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் எந்த உலகப்போரின் விளைவுகளுக்கு பின் உருவாக்கப்பட்ட மனித உரிமை சட்டத்தில் ஒரு பகுதியாகும்?  இரண்டாம் உலகப் போருக்குப் பின் 

  13. ஒவ்வொரு மனிதனுக்கும் இனம் தேசியம் நிறம் பால் வயது சமயம் போன்ற பாகுபாடுகள் இன்றி அரசின் சட்டத்தை தரப்படும் உரிமைகளை பிரிப்பது எது?  குடிமை உரிமைகள் 

  14. அரசாங்கம் அமைக்கவும் நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தப்படும் உரிமைகள் எவை?  அரசியல் உரிமை 

  15. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான உரிமைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? அடிப்படை உரிமைகள் 

  16. சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பது எந்த அடிப்படை உரிமை ஆகும்?  சமத்துவ உரிமை 

  17. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை வகையான சுதந்திர உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன? ஆறு வகையான சுதந்திரங்கள்

    1.  பேச்சுரிமை

    2.  ஆயுதமின்றி கூடும் உரிமை

    3.  சங்கங்கள் அமைக்கும் உரிமை

    4.  இந்தியாவின் எப்பகுதியிலும்  வாழும் உரிமை

    5.  இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமை

    6.  நாடு முழுமையும் தொழிலும் வணிகமும் செய்யும் உரிமை

  18. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள் அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுதத்துவது சட்டப்படி குற்றமாகும் என்று கூறுவது எந்த  அடிப்படை உரிமை?  சுரண்டலுக்கு எதிரான உரிமை 

  19. குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தில் இருக்கவும் பின்பற்றவும் உரிமை அளிப்பது எந்த அடிப்படை உரிமை? சமயச் சுதந்திரம் உரிமை 

  20. எது ஒரு செயலைச் செய்யவோ அல்லது தடுக்கவோ நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு ஆகும்? நீதிப்பேராணை 

  21. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது? 1950  ஜனவரி 26 

  22. எந்த ஆண்டு அடிப்படை கடமைகள் பகுதி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டன? 1976 ஆம் ஆண்டு 42 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் 

  23. அடிப்படை கடமைகள் மொத்தம் எத்தனை? 11

  24. மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன் காப்பதற்காக மதிப்பு சட்டம் எந்த ஆண்டு சட்டமாக இயற்றப்பட்டது?  2007ம் ஆண்டு 

  25. தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?  1993 அக்டோபர் 12ம் நாள் 

  26. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை எது? வகையுரை 1 பிரிவு 21

  27. மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?  ஒரு தலைவரும் இரண்டு உறுப்பினர்களும் 

  28. மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு எதற்கு இணையான அதிகாரம் உண்டு?  உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் 

  29. ஐக்கிய நாடுகள் சபை எத்தனை வயது வரை உள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறது?  18 வயது வரை  

  30. ஐக்கிய நாடுகள் சபை 18 வயது வரை உள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுத்துள்ளது உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் எத்தனையாவது பிரிவில் காணப்படுகிறது?  25ஆவது பிரிவில் 

  31. ஐநா சபை எப்போது குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது?  1989ஆம் ஆண்டு நவம்பர் 20 

  32. அரசியலமைப்பின் பிரிவு 21 A-ல் உள்ளபடி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க எந்த ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது? 2009ம் ஆண்டு

  33. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக  காவலன் எஸ் ஓ எஸ் செயலி எந்த அரசினால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?  தமிழ்நாடு அரசினால்

  34.  எந்தச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது?  போக்ஸோ (POCSO)

  35. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் எந்த சட்டம் ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகிறது? The Protection Of Children from Sexual Offence Act, 2012 (போக்ஸோ )

  36. 12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்கும் குற்றவியல் சட்டத் திருத்த சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?  2018 ஏப்ரல் 

  37. இந்தியாவின் முதல் 24 மணி நேர கட்டணமில்லாத அவசர தொலைத்தொடர்பு  மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் எண் எது?1028 

  38. பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்றும் இயக்கம்) குழந்தைகள் உரிமை அமைப்பின் நிறுவனர் யார்? கைலாஷ் சத்யார்த்தி 

  39. குழந்தை உழைப்பு கொத்தடிமை கடத்தல் போன்ற பல குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து சுமார் எத்தனை குழந்தைகள் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் அவரது குழு உறுப்பினர்களால் மீட்கப்பட்டுள்ளனர்?  86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய  குழந்தைகள் 

  40. உலக மக்களின் கவனத்தை குழந்தை உழைப்புமீது திசைதிருப்ப 80 ஆயிரம் கிலோமீட்டர் நீள குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பை கைலாஷ் சத்யார்த்தி எந்த ஆண்டு முன்னின்று நடத்தினார்? 1998ம் ஆண்டு

  41. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு 14 வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுதல் கூடாது என்கிறது? பிரிவு 24 

  42. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு 14 வயது நிறைவடையும் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறது? பிரிவு 45 

  43. எந்த ஆண்டு தமிழ்நாடு அரசு இந்து வாரிசுரிமை சட்டம் நிறைவேற்றி மூதாதையர் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கியது?  1989ம் ஆண்டு

  44. மத்திய அரசு எந்த ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம் மேற்கொண்டு மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றியது? 2005ம் ஆண்டு

  45. யாரால் பெண் தொழிலாளர்களுக்காக இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது?  டாக்டர் பி ஆர் அம்பேத்கார் 

  46. தமிழ்நாட்டில் திருநங்கையர்கள் எந்தப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன?  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 

  47. அரசு நிறுவனங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவருவதற்கான இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இயற்றப்பட்ட சட்டம் எது? தகவல் அறியும் உரிமைச் சட்டம் 

  48. இரு பாலின தவறுக்கும் சம தண்டனை சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்யும்  சட்டப்பிரிவு எது?  சட்டப்பிரிவு 39b

  49. ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும் போது ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது என்று கூறியவர் யார்?  ஜான் எஃப் கென்னடி 

  50. தகவல் அறியும் உரிமைச்சட்ட செயல்பாட்டாளர்கள் யார்? அருணாராய், நிகில்தேவ் 

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...