Tuesday, December 1

TNPSC Group 4 Notes General Tamil - (PART -1)




  

  1. ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு -  1914
  2.  இயற்கையை சுவைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளாக திகழும் ஆவணங்கள் யாவை? - தமிழர்களின் உணவு உடை  வாழிடம் முதலியன
  3. பட்டிமன்றம் என்பதன் இலக்கிய வழக்கு இது? -  பட்டி மண்டபம்
  4. பட்டிமண்டபம் என்னும் இலக்கிய வழக்கு காணப்படும் நூல்கள் -  சிலப்பதிகாரம் மணிமேகலை திருவாசகம் மற்றும் கம்ப ராமாயணத்தின் பால காண்டம்
  5. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று கூறும் இலக்கண நூல் -  நன்னூல் (பவணந்தி முனிவர்)
  6.  அகழாய்வு பணி துவங்கப்பட்ட ஆண்டு -  1863
  7. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
  8.  திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
  9.  திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மலர்கள் -  அனிச்ச மலர் குவளை மலர்
  10.  திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் -  நெருஞ்சிப்பழம்
  11. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை -  குன்றிமணி
  12.  திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் -  குறிப்பறிதல்
  13.  திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் -  பனை மரம் மூங்கில் மரம்
  14.  திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் -  தஞ்சை ஞானப்பிரகாசர் ( மலையத்துவசன் மகன்)
  15. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் -  மணக்குடவர்
  16. திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது? -  ஏழு இடங்களில்
  17. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது? -  எட்டுக் குறட்பாக்களில்
  18. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி யு போப்
  19.    என் சமகாலத் தோழர்களே   என்னும் கவிதை இயற்றியவர் -  வைரமுத்து
  20. கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் -  தேனி மாவட்டம் மெட்டூர்
  21. இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது பெற்றவர் -  கவிஞர் வைரமுத்து
  22. கவிஞர் வைரமுத்துவுக்கு 2003ஆம் ஆண்டு எந்த புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது? -  கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்துக்காக
  23. கவியரசு வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்? - 7 முறை பெற்றுள்ளார்
  24. கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்? -  ஆறுமுறை
  25. இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் யார்? - தமிழ்நாட்டைச் சார்ந்த  சிவன்
  26. இஸ்ரோவின் தலைவர் பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் என்னும் சிறப்பு பெற்றவர் யார்? - சிவன்
  27. 2015 விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளவர் யார்? -  சிவன்
  28. இஸ்ரோவின்  தலைவர் சிவனின் சொந்த ஊர் எது? -  வல்லங்குமாரவிளை (கிராமம்)  நாகர்கோவில்
  29. PSLV திட்டத்தை தொடங்க அரசாங்கம் இசைவு தந்த வருடம் எது? - 1983
  30. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? -  விக்ரம் சாராபாய்
  31.  ஆர்யபட்டா என்ற முதல் செயற்கைக்கோள்   ஏவ  காரணமாக இருந்தவர் யார்? - விக்ரம் சாராபாய்
  32.  செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவியவர் -  விக்ரம் சாராபாய்
  33.  விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு செயல்பட்டு வருகிறது? -  திருவனந்தபுரத்தில்
  34. யாருடைய முயற்சியினாலேயே இஸ்ரோ தொடங்கப்பட்டது? -  விக்ரம் சாராபாய்
  35. முதன் முதலில் சிவன் உருவாக்கிய செயலி பெயர் என்ன? - சிதாரா
  36. யாராவது சிறியதாக சாதித்த வரை பெரியதாக பாராட்டியவர் யார்? - அப்துல் கலாம் அவர்கள்
  37. அப்துல் கலாம் அவர்கள் சிவனை எவ்வாறு அழைத்தார்? -  மென்பொறியாளர் என்று
  38. இந்தியாவின்  11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் -  அப்துல் கலாம் அவர்கள்
  39.  அப்துல் கலாம் ஊர் எது? -  தமிழ்நாட்டில் ராமேஸ்வரம்
  40. இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்? -  அப்துல் கலாம் அவர்கள்
  41. அப்துல் கலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருது எது? -  பாரத ரத்னா விருது
  42. ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைகோள்களை ஏவிய ஆண்டு எது? - 1957
  43. இதுவரை இந்தியாவுக்காக எத்தனை செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன? -  45  செயற்கைக்கோள்கள்
  44. 2015 தமிழ் நாடு அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்? -  வளர்மதி (அரியலூர்)
  45.   வளர்மதி அவர்கள்  எப்போது முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்? - 1984 முதல்
  46. 2012 உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார்? -  வளர்மதி
  47. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் யார்? -  வளர்மதி
  48. கடல் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட செயலியின் பெயர் என்ன? - நேவிக் (NAVIC)
  49. நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட செயற்கை கோள் எது? -  சந்திராயன் 1
  50. ரோவார் எனப்படும் ஆராயும்போது ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப உதவியினால் தானாகவே வெளிவந்து நிலவில் இறங்கி எத்தனை நாட்கள் பயணிக்கும்? -  14 நாட்கள்
  51. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குனர் யார்? -   அருணன் சுப்பையா
  52. அருணன் சுப்பையாவின்  ஊர் எது? -  கோதைசேரி (ஏர்வாடி அருகே - திருநெல்வேலி மாவட்டம்)
  53.  அருணன் சுப்பையா திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எப்போது பணியில் சேர்ந்தார்? - 1984
  54. 2013-ல் மங்கள்யான் செயற்கைகோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனராக இருப்பவர் யார்?  - அருணன் சுப்பையா
  55. இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்? -  மயில்சாமி அண்ணாதுரை
  56. மயில்சாமி அண்ணாதுரை பிறந்த ஊர் எது? -   கோதவாடி என்னும் சிற்றூர் (கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம்)
  57. மயில்சாமி அண்ணாதுரை இதுவரை எத்தனை முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார்? -  5 முனைவர் பட்டங்கள்
  58. மயில்சாமி  அண்ணாதுரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார்? - 1982 (தற்போது இயக்குனராக உள்ளார்)
  59. இந்தியா முதன் முதலில் நிலவுக்கு அனுப்பிய ஆய்வுக்களம் சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்? -  மயில்சாமி அண்ணாதுரை  (சந்திராயன் 2  திட்டத்திலும் பணியாற்றி வருகிறார்)
  60. சர் சி வி ராமன்  நினைவு  அறிவியல் விருது  உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் -   மயில்சாமி அண்ணாதுரை
  61. தமது வாழ்வியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூலாக எழுதி உள்ளவர் யார்? -  மயில்சாமி அண்ணாதுரை
  62. இஸ்ரோவில் எவ்வகையான திட்டங்கள் எப்போதும் இருக்கும்? -  (3 ஆண்டுகள் 7 ஆண்டுகள் 15 ஆண்டுகள்) மூன்று வகையான திட்டங்கள்
  63. இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே - மறுமலர்ச்சி இலக்கியங்கள்
  64. குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூல் அமைந்துள்ளது உணர்த்துவது எது? -  குடும்ப விளக்கு என்னும் நூல்
  65. குடும்ப விளக்கு நூல் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? -  ஐந்து பகுதிகளாக
  66. பாடப் பகுதியில் அமைந்துள்ள கவிதைகள் எந்த பகுதியில் உள்ளவை? -  இரண்டாம் பகுதியில் (விருந்தோம்பல் எனும் தலைப்பில்)
  67. பாரதிதாசனின் இயற்பெயர் -  கனகசுப்புரத்தினம்
  68.  பாரதிதாசன் எழுதிய கவிதைகள் அனைத்தும்  எந்த பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன? -  பாரதிதாசன் கவிதைகள் எனும் பெயரில்
  69. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது? -  பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு
  70. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றவர் -  பாரதியார்
  71.  மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றவர் -  கவிமணி
  72. பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது என்றவர் -  பாரதிதாசன்
  73. மனித வாழ்வை செழுமையாக்கும் அவை யாவை? -  அற  பண்புகள்  
  74. பூவாதே காய்க்கும் மரமுள நன்றறிவார் -  என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் -  சிறுபஞ்சமூலம்
  75.  இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி -  எடுத்துக்காட்டு உவமையணி
  76. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றிய நூல்கள் யாவை? -  நீதி நூல்கள்
  77. நீதி நூல்கள் எப்பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன?  - பதினெண்கீழ்க்கணக்கு எனும் பெயரில்
  78. சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன? -  ஐந்து சிறிய வேர்கள் என்பது
  79. ஐந்து சிறிய வேர்கள் - கண்டங்கத்திரி,  சிறுவழுதுணை,  சிறுமல்லி,  பெருமல்லி,  நெருஞ்சி
  80. மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாக எத்தனை பாடல் எத்தனை கருத்துகள் சிறுபஞ்சமூலம் பாடலில் உள்ளன? - 5 கருத்துகள்
  81. எந்த நூலிலுள்ள பாடல்கள் நன்மை தருவன தீமை தருவன நகைப்புக்கு  உரியன எனும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன? - சிறுபஞ்சமூலம்
  82.  சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்? -  காரியாசான்
  83. காரியாசான் யாருடைய மாணாக்கர்? -  மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்
  84.  காரியாசான் இயற்பெயர் என்ன? -  காரி
  85. காரியாசான் என்பதில் தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர் எது? -  ஆசான்
  86.  காரியாசானை பாயிரச் செய்யுள் எவ்வாறு சிறப்பிக்கிறது? -  மாக் காரியாசான் என்று
  87. 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் -  வள்ளலார்
  88.  11  வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் -  பாரதியார்
  89.  15 வயதிலேயே பிரெஞ்சு  இலக்கிய கழகத்திற்கு தனது கவிதைகளை எழுதி அனுப்பியவர்  -  விக்டர் ஹியூகோ
  90. 16வது வயதிலேயே தனது தந்தையின் போர்படை தளபதி ஆனவர் -  மாவீரன் அலெக்சாண்டர்
  91. 17 வது வயதிலேயே பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் -  விஞ்ஞானி கலிலியோ கலிலி
  92. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் -  என்று கூறியவர் யார்? -  ஆபிரகாம் லிங்கன்
  93. மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது -  சிரிப்பும் சிந்தனையும்
  94. இசையை போன்றே இதயத்தை பண்படுத்துவது இது?  - நூல்கள்
  95. 2009 ஆம் ஆண்டு நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட எத்தனை ரூபாய் நாணயத்தை வெளியிட்டது? -  ஐந்து ரூபாய் நாணயத்தை
  96. எந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது? - 2010
  97. இளைஞர்கள் உரிமைப்போர் படையின் ஈட்டி முனைகள் என்றவர் யார்? -  அண்ணா
  98. எழுத்தாளரான அண்ணா அவை எவ்வாறு அழைத்தனர்? -  தென்னாட்டு பெர்னாட்ஷா
  99. தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள் திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்?   அண்ணா
  100. 1935 சென்னை பெத்தநாயக்கன் பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றியவர் யார்? -  அண்ணா
  101. அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் யாவை? -  ஹோம்ரூல்,  ஹோம்லேண்ட்,  நம் நாடு, திராவிட நாடு, மாலைமணி, காஞ்சி
  102. அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் யாவை? - குடியரசு,  விடுதலை
  103. அண்ணா இருமொழி சட்டத்தை எப்போது உருவாக்கினார்? -  முதலமைச்சராக பொறுப்பேற்றதும்
  104. சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்று மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் யார்? - அண்ணா
  105. அண்ணாவின் சிறுகதை  திறன் எனும் ஆய்வு நூலை எழுதியவர் யார்? -  முனைவர் பெ.குமார்
  106. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்னும் புகழுக்குரிய நூலகம் எது? -- தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
  107. இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடம் எது? -  தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
  108.  உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது? -  சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகம்
  109. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரிய நூலகம் இது? -  திருவனந்தபுரம் நடுவன் நூலகம்
  110. இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகவும், ஆவணக்காப்பக நூலகமாகவும் கல்கத்தாவில் 1836 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட தேசிய நூலகம் எது ? - கல்கத்தா தேசிய நூலகம்
  111. உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையை தாங்கி நிற்கும் உலகம்  எது? -  அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்
  112. யாருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 9ஆம் நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது? -  சீர்காழி R.  அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாள்

 

 

 

 

 

 


ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...