Thursday, August 9

ஒன்பதாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் கேள்வி பதில்கள்




  1. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே -  என்ற பாடல் வரிகள் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன்
  2. தமிழோவியம் எனும் தலைப்பில் பாடலை இயற்றியவர் -  ஈரோடு தமிழன்பன்
  3. தமிழோவியம் என்னும் நூலை எழுதியவர் - ஈரோடு தமிழன்பன்
  4. ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று கூறியவர்  - ஈரோடு தமிழன்பன்
  5. ஹைக்கூ சென்ரியு லிமரைக்கூ என புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை எழுதியவர் - ஈரோடு தமிழன்பன்
  6. ஈரோடு தமிழன்பன் எழுதிய எந்த கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது -  வணக்கம் வள்ளுவ
  7. தமிழக அரசின் பரிசு பெற்ற தமிழன்பனின் நூல் - தமிழன்பன் கவிதைகள்
  8. தமிழன்பனின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள  மொழிகள் - ஹிந்தி உருது மலையாளம் ஆங்கிலம்
  9. உலகத் தாய்மொழி நாள் -  பிப்ரவரி 21
  10. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறிய நூல் -  பிங்கல நிகண்டு
  11. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் -  சிங்கப்பூர் இலங்கை
  12. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது
  13. எங்கும் காணோம் என்று பாடியவர் - பாரதியார்
  14. தமிழின் இனிமை இலக்கியவளம் பாச்சிறப்பு சுவை அழகு திறம் தகுதி ஆகியன விரவியுள்ள சிற்றிலக்கியம் -  தமிழ்விடு தூது
  15. தித்திக்கும் தெள்அமுதாய் தெள்ளமுதின் மேலான  என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் - தமிழ்விடு தூது
  16. மூன்று இனம்  என்பவை - துறை தாழிசை விருத்தம்
  17. இரண்டு கண்களை போல் எழுந்து எழுந்து பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு பெயர்  - கண்ணி
  18. தமிழில் இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை - கண்ணி  
  19. முக்குணம் -  சத்துவம்,  ராசசம், தாமசம்
  20. அமைதி மேன்மை ஆகியவற்றை சுட்டும் குணம்  - சத்துவம்
  21. போர் தீவிரமான செயல்களை  குறிக்கும் குணம் - ராசசம்
  22. சோம்பல்  தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம் -  தாமசம்
  23. பத்து குண  அணிகள் - செறிவு, தெளிவு,  சமநிலை, இன்பம், ஒழுகிசை உதாரம், உய்த்தலில்  பொருண்மை, காந்தம், வலி, சமாதி
  24. தமிழ்விடு தூது கூறும் 5 வண்ணங்கள் -  வெள்ளை சிவப்பு கறுப்பு மஞ்சள் பச்சை
  25. நவரசம் என்பது -  வீரம் அச்சம் இழிப்பு வியப்பு காமம் அவலம் கோபம் நகை சமநிலை
  26. ஒன்பது சுவை என்பது -  நவரசம்
  27. அழகு 8 பெற்றுள்ளது -  தமிழ் (அம்மை,  அழகு, தொன்மை, தோல்,  விருந்து, இயைபு, புலன்,  இழைபு)
  28. தூது இலக்கியத்தின் வேறு பெயர்கள் - சந்து இலக்கியம், வாயில் இலக்கியம்  
  29. தூது இலக்கியத்தின் பாவகை -  கலிவெண்பா
  30. தமிழ்விடு தூது பாடல் யாருக்கு தூண்டுவதாக அமைந்துள்ளது? -  மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர்க்கு
  31. தமிழ்விடு தூது பாடலில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை - 268 கண்ணிகள்
  32. தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர்  - 1930  உ.வே.சா.
  33. தமிழ்விடு தூது  நூலின் ஆசிரியர் பெயர் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  34. காதொளிரும்  குண்டலமும் கைக்கு வளையாபதியும் என்று ஐம்பெரும் காப்பியங்களையும் தமிழ் அன்னைக்கு சூட்டி  கவிதை இயற்றியவர் - கவியோகி சுத்தானந்த பாரதியார்
  35. Cyberspace என்பது -  இணையவெளி
  36. ஆங்கிலத்தில் நேவி என்பது எம்மொழிச் சொல்? - தமிழ்ச் சொல்லாகிய நாவாய் என்பது
  37. உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது  - கிரேக்க மொழி
  38. தமிழிலிருந்து கிரேக்கத்தில் வழங்கிவரும் சொற்கள்:
    1. தமிழ் கிரேக்கம்
    2. எறிதிரை   எறுதிரான்
    3. கலன் கலயுகோய்
    4. நீர் நீரியோஸ்
    5. நாவாய் நாயு
    6. தோணி   தோணீஸ்
  39. --------- சார்ந்த சொற்களை தமிழில் கிரேக்க மொழியிலும் ஒப்பாக காணமுடிகிறது -  கவிதை சார்ந்த
  40. பா என்னும் தமிழ்ச்சொல் கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில்  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? - பாய்யியோனா
  41. அப்பல்லோ என்னும் கடவுளுக்கு பாடப்படுவதாக கிரேக்கத்தில் குறிப்பிடப்படும் பாவகை  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? - பா என குறிப்பிடப்படுகிறது
  42. வெண்பாவின் ஓசை -  செப்பலோசை
  43. கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - சாப்போ
  44. சாப்போ என்பது கிரேக்கத்திலிருந்து லத்தீன் மொழிக்கு வந்தபின் ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது? - சேப்பிக் ஸ்டேன்சா
  45. பாவின் சுவைகளில் ஒன்றான  துன்ப சுவையினை தமிழ் இலக்கணங்கள் எவ்வாறு சுட்டுகின்றன? - இளிவரல்
  46. கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - இளிகியா
  47. இலியாத்து காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது? -  கிபி எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது
  48. கிரேக்க நூலின் பெயரிலேயே தமிழ்ச்சொல் இருப்பதாக கூறப்படும் நூல் பெயர் -  எறிதிரேசியன்  ஆப் த பெரிபுலஸ்  எனும் நூல்
  49. எறிதிரேசியன்  ஆப் த பெரிபுலஸ்  என்பதன் பொருள் - கடலைச் சார்ந்த பெரிய புலம்
  50. கிரேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக வரவேண்டும் என்பதை குறிப்பிடும் நூல் எது? -  கிரேக்க நூல் ஒன்று
  51. பட்ட மரம் என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் -  கவிஞர் தமிழ் ஒளி
  52. கந்தம் என்பதன் பொருள் -  மணம்
  53. கவிஞர் தமிழ் ஒளி  பிறந்த ஊர் - புதுவை (1924 - 1965)
  54. பாரதியாரின் வழிதோன்றல் ஆகும் பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர் யார்? - கவிஞர் தமிழ் ஒளி
  55. பட்ட மரம் எனும் தலைப்பிலான கவிதை இடம் பெற்ற நூல் - தமிழ் ஒளியின் கவிதைகள்
  56. காவிரியின் பாதை எல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிற நூல் எது? - பெரியபுராணம்
  57. மா என்பதன் பொருள் -  வண்டு
  58. தரளம் என்பதன் பொருள் - முத்து
  59. பணிலம், சுரி வளை என்பதன் பொருள்  - சங்கு
  60. மாடு என்பதன் பொருள் - பக்கம்
  61. கோடு என்பதன் பொருள் - குளக்கரை
  62. சூடு என்பதன் பொருள்  - நெல் அரிக்கட்டு
  63. வேரி என்பதன் பொருள் - தேன்
  64. அடியார் பெருமையை ஓரடியில்  கூறும் நூல் - சுந்தரரின் திருத்தொண்டத் தொகை
  65. ஒவ்வொரு பாடலிலும் அடியாரின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ள நூல் -  நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி
  66. திருத்தொண்டர் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி இவ்விரு  நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - சேக்கிழாரின் பெரிய புராணம்
  67. ஒவ்வொரு புராணத்திலும்  ஒவ்வொரு அடியாராக 63 அடியார்களின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்ட நூல் -  திருத்தொண்டர் புராணம்
  68. சேக்கிழாரின் காலம் -  கிபி 12ஆம் நூற்றாண்டு
  69. சேக்கிழார் எந்த அரசரின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார்? - சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில்
  70. பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று  சேக்கிழாரை பாராட்டியவர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
  71. வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ என்று பாடியவர் -  பாரதியார்
  72. நம் முன்னோர்கள் நீர்நிலைகளை உருவாக்குபவர்களை எவ்வாறு போற்றினர்? -  உயிரை உருவாக்குபவர்கள்
  73. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் புறநானூற்று பாடலை பாடியவர் யார்? - பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது
  74. சான்றோர் தெளிவாக ஆராய்ந்து தெளிந்த பொருட்களை பிறருக்கு எடுத்துரைப்பது -  பொருண்மொழிக் காஞ்சித் துறை
  75. பண்டைய வேந்தர்களின் வீரம் வெற்றி கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் புலவர்கள் சான்றோர்கள் புலவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் கூறும் நூல் -  புறநானூறு
  76. தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டு அடையாளமாக திகழும் நூல் -  புறநானூறு
  77. குளம் தொட்டு  கோடு பதித்து எனும் பாடல் இடம் பெற்ற நூல் -  சிறுபஞ்சமூலம்
  78. தண்ணீர் எனும் சிறுகதை எழுதியவர் -  கந்தர்வன்
  79. கந்தர்வனின் இயற்பெயர் -  நாகலிங்கம்
  80. கந்தர்வனின் ஊர் -  ராமநாதபுரம் மாவட்டம்
  81. கந்தர்வன் எங்கு பணியாற்றினார்? -  தமிழ்நாடு அரசின் கருவூல கணக்குத் துறை
  82. புகார் நகரில் உள்ள அதிகம் தொடர்புடையதாக திகழ்ந்த விழா -  இந்திர விழா
  83. காலத்தை கணக்கிட்டு சொல்லுபவர்கள் -  காலக்கணிதர்கள்
  84. இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும்? -  28 நாட்கள்
  85. தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத்   திகழும் நூல்கள் - மணிமேகலை சிலப்பதிகாரம்
  86. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் எது? -  மணிமேகலை ( மணிமேகலை துறவு)
  87. பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம் இது? -  மணிமேகலை
  88. சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்த காப்பியம் எது? -  மணிமேகலை
  89. மணிமேகலை நூலின் முதல்  காதை எது? - விழாவறை காதை  
  90. மணிமேகலையில் மொத்தம் அமைந்துள்ள காதைகள் எத்தனை? -  முப்பது காதைகள்
  91. மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் யார்? -  கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  92. சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன? -  சாத்தன்
  93. திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் யார்? -  சீத்தலை சாத்தனார்
  94. சீத்தலைச் சாத்தனார் செய்துவந்த தொழில் யாது? - கூலவாணிகம்
  95. கூலம் என்பதன் பொருள் என்ன? -  தானியம்
  96. சீத்தலைச் சாத்தனார் யாருடைய சமகாலத்தவர்? - இளங்கோவடிகளின் சமகாலத்தவர் (நண்பர்)
  97. தண்டமிழ் ஆசான்,  சாத்தன், நன்னூற்புலவன்  என்று சீத்தலைச் சாத்தனார் பாடியவர் யார்? -  இளங்கோவடிகள்
  98. 1863 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்னும் தொல்லியல் அறிஞர் சென்னை பல்லாவரம் சென்னை மேட்டுப்பகுதியில் எலும்பையும் கருவியையும் கண்டுபிடித்தார் ( இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் இது)
  99. ரோமானியரின் பழங்காசுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன? -  கோவையில்
  100. ரோமானியரின் மட்பாண்டங்கள் எங்கு கிடைத்தன? -  அரிக்கமேடு அகழாய்வு







  1. ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு -  1914
  2. இயற்கையை சுவைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளாக திகழும் ஆவணங்கள் யாவை? - தமிழர்களின் உணவு உடை  வாழிடம் முதலியன
  3. பட்டிமன்றம் என்பதன் இலக்கிய வழக்கு இது? -  பட்டி மண்டபம்
  4. பட்டிமண்டபம் என்னும் இலக்கிய வழக்கு காணப்படும் நூல்கள் -  சிலப்பதிகாரம் மணிமேகலை திருவாசகம் மற்றும் கம்ப ராமாயணத்தின் பால காண்டம்
  5. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று கூறும் இலக்கண நூல் -  நன்னூல் (பவணந்தி முனிவர்)
  6. அகழாய்வு பணி துவங்கப்பட்ட ஆண்டு -  1863
  7. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
  8. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
  9. திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மலர்கள் -  அனிச்ச மலர் குவளை மலர்
  10. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் -  நெருஞ்சிப்பழம்
  11. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை -  குன்றிமணி
  12. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் -  குறிப்பறிதல்
  13. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் -  பனை மரம் மூங்கில் மரம்
  14. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் -  தஞ்சை ஞானப்பிரகாசர் ( மலையத்துவசன் மகன்)
  15. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் -  மணக்குடவர்
  16. திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது? -  ஏழு இடங்களில்
  17. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது? -  எட்டுக் குறட்பாக்களில்
  18. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி யு போப்
  19.  ஓ என் சமகாலத் தோழர்களே   என்னும் கவிதை இயற்றியவர் -  வைரமுத்து
  20. கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் -  தேனி மாவட்டம் மெட்டூர்
  21. இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது பெற்றவர் -  கவிஞர் வைரமுத்து
  22. கவிஞர் வைரமுத்துவுக்கு 2003ஆம் ஆண்டு எந்த புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது? -  கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்துக்காக
  23. கவியரசு வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்? - 7 முறை பெற்றுள்ளார்
  24. கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்? -  ஆறுமுறை
  25. இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் யார்? - தமிழ்நாட்டைச் சார்ந்த  சிவன்
  26. இஸ்ரோவின் தலைவர் பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் என்னும் சிறப்பு பெற்றவர் யார்? - சிவன்
  27. 2015 விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளவர் யார்? -  சிவன்
  28. இஸ்ரோவின்  தலைவர் சிவனின் சொந்த ஊர் எது? -  வல்லங்குமாரவிளை (கிராமம்)  நாகர்கோவில்
  29. PSLV திட்டத்தை தொடங்க அரசாங்கம் இசைவு தந்த வருடம் எது? - 1983
  30. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? -  விக்ரம் சாராபாய்
  31. ஆர்யபட்டா என்ற முதல் செயற்கைக்கோள்   ஏவ காரணமாக இருந்தவர் யார்? - விக்ரம் சாராபாய்
  32. செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவியவர் -  விக்ரம் சாராபாய்
  33. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு செயல்பட்டு வருகிறது? -  திருவனந்தபுரத்தில்
  34. யாருடைய முயற்சியினாலேயே இஸ்ரோ தொடங்கப்பட்டது? -  விக்ரம் சாராபாய்
  35. முதன் முதலில் சிவன் உருவாக்கிய செயலி பெயர் என்ன? - சிதாரா
  36. யாராவது சிறியதாக சாதித்த வரை பெரியதாக பாராட்டியவர் யார்? - அப்துல் கலாம் அவர்கள்
  37. அப்துல் கலாம் அவர்கள் சிவனை எவ்வாறு அழைத்தார்? -  மென்பொறியாளர் என்று
  38. இந்தியாவின்  11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் -  அப்துல் கலாம் அவர்கள்
  39. அப்துல் கலாம் ஊர் எது? -  தமிழ்நாட்டில் ராமேஸ்வரம்
  40. இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்? -  அப்துல் கலாம் அவர்கள்
  41. அப்துல் கலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருது எது? -  பாரத ரத்னா விருது
  42. ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைகோள்களை ஏவிய ஆண்டு எது? - 1957
  43. இதுவரை இந்தியாவுக்காக எத்தனை செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன? -  45  செயற்கைக்கோள்கள்
  44. 2015 தமிழ் நாடு அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்? -  வளர்மதி ( அரியலூர்)
  45.  வளர்மதி அவர்கள்  எப்போது முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்? - 1984 முதல்
  46. 2012 உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார்? -  வளர்மதி
  47. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் யார்? -  வளர்மதி
  48. கடல் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட செயலியின் பெயர் என்ன? - நேவிக் (NAVIC)
  49. நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட செயற்கை கோள் எது? -  சந்திராயன் 1
  50. ரோவார் எனப்படும் ஆராயும்போது ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப உதவியினால் தானாகவே வெளிவந்து நிலவில் இறங்கி எத்தனை நாட்கள் பயணிக்கும்? -  14 நாட்கள்
  51. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குனர் யார்? -   அருணன் சுப்பையா
  52. அருணன் சுப்பையாவின்  ஊர் எது? - கோதைசேரி (ஏர்வாடி அருகே - திருநெல்வேலி மாவட்டம்)
  53. அருணன் சுப்பையா திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எப்போது பணியில் சேர்ந்தார்? - 1984
  54. 2013-ல் மங்கள்யான் செயற்கைகோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனராக இருப்பவர் யார்?  - அருணன் சுப்பையா
  55. இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்? -  மயில்சாமி அண்ணாதுரை
  56. மயில்சாமி அண்ணாதுரை பிறந்த ஊர் எது? -   கோதவாடி என்னும் சிற்றூர் (கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம்)
  57. மயில்சாமி அண்ணாதுரை இதுவரை எத்தனை முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார்? -  5 முனைவர் பட்டங்கள்
  58. மயில்சாமி  அண்ணாதுரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார்? - 1982 (தற்போது இயக்குனராக உள்ளார்)
  59. இந்தியா முதன் முதலில் நிலவுக்கு அனுப்பிய ஆய்வுக்களம் சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்? -  மயில்சாமி அண்ணாதுரை  (சந்திராயன் 2  திட்டத்திலும் பணியாற்றி வருகிறார்)
  60. சர் சி வி ராமன்  நினைவு அறிவியல் விருது  உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் -   மயில்சாமி அண்ணாதுரை
  61. தமது வாழ்வியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூலாக எழுதி உள்ளவர் யார்? -  மயில்சாமி அண்ணாதுரை
  62. இஸ்ரோவில் எவ்வகையான திட்டங்கள் எப்போதும் இருக்கும்? -  (3 ஆண்டுகள் 7 ஆண்டுகள் 15 ஆண்டுகள்) மூன்று வகையான திட்டங்கள்
  63. இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே - மறுமலர்ச்சி இலக்கியங்கள்
  64. குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூல் அமைந்துள்ளது உணர்த்துவது எது? -  குடும்ப விளக்கு என்னும் நூல்
  65. குடும்ப விளக்கு நூல் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? -  ஐந்து பகுதிகளாக
  66. பாடப் பகுதியில் அமைந்துள்ள கவிதைகள் எந்த பகுதியில் உள்ளவை? -  இரண்டாம் பகுதியில் (விருந்தோம்பல் எனும் தலைப்பில்)
  67. பாரதிதாசனின் இயற்பெயர் -  கனகசுப்புரத்தினம்
  68. பாரதிதாசன் எழுதிய கவிதைகள் அனைத்தும்  எந்த பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன? - பாரதிதாசன் கவிதைகள் எனும் பெயரில்
  69. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது? -  பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு
  70. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றவர் -  பாரதியார்
  71. மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றவர் -  கவிமணி
  72. பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது என்றவர் -  பாரதிதாசன்
  73. மனித வாழ்வை செழுமையாக்கும் அவை யாவை? -  அற  பண்புகள்  
  74. பூவாதே காய்க்கும் மரமுள நன்றறிவார் -  என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் -  சிறுபஞ்சமூலம்
  75. இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி -  எடுத்துக்காட்டு உவமையணி
  76. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றிய நூல்கள் யாவை? -  நீதி நூல்கள்
  77. நீதி நூல்கள் எப்பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன?  - பதினெண்கீழ்க்கணக்கு எனும் பெயரில்
  78. சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன? -  ஐந்து சிறிய வேர்கள் என்பது
  79. ஐந்து சிறிய வேர்கள் - கண்டங்கத்திரி,  சிறுவழுதுணை, சிறுமல்லி,  பெருமல்லி, நெருஞ்சி
  80. மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாக எத்தனை பாடல் எத்தனை கருத்துகள் சிறுபஞ்சமூலம் பாடலில் உள்ளன? - 5 கருத்துகள்
  81. எந்த நூலிலுள்ள பாடல்கள் நன்மை தருவன தீமை தருவன நகைப்புக்கு  உரியன எனும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன? - சிறுபஞ்சமூலம்
  82. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்? -  காரியாசான்
  83. காரியாசான் யாருடைய மாணாக்கர்? -  மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்
  84. காரியாசான் இயற்பெயர் என்ன? -  காரி
  85. காரியாசான் என்பதில் தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர் எது? -  ஆசான்
  86. காரியாசான் பாயிரச் செய்யுள் எவ்வாறு சிறப்பிக்கிறது? -  மாக் காரியாசான் என்று
  87. 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் -  வள்ளலார்
  88. 11  வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் -  பாரதியார்
  89. 15 வயதிலேயே பிரெஞ்சு  இலக்கிய கழகத்திற்கு தனது கவிதைகளை எழுதி அனுப்பியவர்  - விக்டர் ஹியூகோ
  90. 16வது வயதிலேயே தனது தந்தையின் போர்படை தளபதி ஆனவர் -  மாவீரன் அலெக்சாண்டர்
  91. 17 வது வயதிலேயே பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் -  விஞ்ஞானி கலிலியோ கலிலி
  92. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் -  என்று கூறியவர் யார்? - ஆபிரகாம் லிங்கன்
  93. மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது -  சிரிப்பும் சிந்தனையும்
  94. இசையை போன்றே இதயத்தை பண்படுத்துவது இது?  - நூல்கள்
  95. 2009 ஆம் ஆண்டு நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட எத்தனை ரூபாய் நாணயத்தை வெளியிட்டது? -  ஐந்து ரூபாய் நாணயத்தை
  96. எந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது? - 2010
  97. இளைஞர்கள் உரிமைப்போர் படையின் ஈட்டி முனைகள் என்றவர் யார்? -  அண்ணா
  98. எழுத்தாளரான அண்ணா அவை எவ்வாறு அழைத்தனர்? -  தென்னாட்டு பெர்னாட்ஷா
  99. தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள் திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்? - அண்ணா
  100. 1935 சென்னை பெத்தநாயக்கன் பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றியவர் யார்? -  அண்ணா
  101. அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் யாவை? -  ஹோம்ரூல்,  ஹோம்லேண்ட்,  நம் நாடு, திராவிட நாடு, மாலைமணி, காஞ்சி
  102. அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் யாவை? - குடியரசு,  விடுதலை
  103. அண்ணா இருமொழி சட்டத்தை எப்போது உருவாக்கினார்? -  முதலமைச்சராக பொறுப்பேற்றதும்
  104. சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்று மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் யார்? - அண்ணா
  105. அண்ணாவின் சிறுகதை  திறன் எனும் ஆய்வு நூலை எழுதியவர் யார்? -  முனைவர் பெ.குமார்
  106. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்னும் புகழுக்குரிய நூலகம் எது? -- தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
  107. இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடம் எது? -  தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
  108. உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது? -  சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகம்
  109. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரிய நூலகம் இது? -  திருவனந்தபுரம் நடுவன் நூலகம்
  110. இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகவும், ஆவணக்காப்பக நூலகமாகவும் கல்கத்தாவில் 1836 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட தேசிய நூலகம் எது ? - கல்கத்தா தேசிய நூலகம்
  111. உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையை தாங்கி நிற்கும் உலகம்  எது? - அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்
  112. யாருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 9ஆம் நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது? -  சீர்காழி R.  அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாள்








ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...