Tuesday, August 28
Tuesday, August 14
Monday, August 13
Thursday, August 9
ஒன்பதாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் கேள்வி பதில்கள்
- காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே - என்ற பாடல் வரிகள் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன்
- தமிழோவியம் எனும் தலைப்பில் பாடலை இயற்றியவர் - ஈரோடு தமிழன்பன்
- தமிழோவியம் என்னும் நூலை எழுதியவர் - ஈரோடு தமிழன்பன்
- ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று கூறியவர் - ஈரோடு தமிழன்பன்
- ஹைக்கூ சென்ரியு லிமரைக்கூ என புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை எழுதியவர் - ஈரோடு தமிழன்பன்
- ஈரோடு தமிழன்பன் எழுதிய எந்த கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது - வணக்கம் வள்ளுவ
- தமிழக அரசின் பரிசு பெற்ற தமிழன்பனின் நூல் - தமிழன்பன் கவிதைகள்
- தமிழன்பனின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள் - ஹிந்தி உருது மலையாளம் ஆங்கிலம்
- உலகத் தாய்மொழி நாள் - பிப்ரவரி 21
- இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறிய நூல் - பிங்கல நிகண்டு
- தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் - சிங்கப்பூர் இலங்கை
- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது
- எங்கும் காணோம் என்று பாடியவர் - பாரதியார்
- தமிழின் இனிமை இலக்கியவளம் பாச்சிறப்பு சுவை அழகு திறம் தகுதி ஆகியன விரவியுள்ள சிற்றிலக்கியம் - தமிழ்விடு தூது
- தித்திக்கும் தெள்அமுதாய் தெள்ளமுதின் மேலான என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் - தமிழ்விடு தூது
- மூன்று இனம் என்பவை - துறை தாழிசை விருத்தம்
- இரண்டு கண்களை போல் எழுந்து எழுந்து பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு பெயர் - கண்ணி
- தமிழில் இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை - கண்ணி
- முக்குணம் - சத்துவம், ராசசம், தாமசம்
- அமைதி மேன்மை ஆகியவற்றை சுட்டும் குணம் - சத்துவம்
- போர் தீவிரமான செயல்களை குறிக்கும் குணம் - ராசசம்
- சோம்பல் தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம் - தாமசம்
- பத்து குண அணிகள் - செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி
- தமிழ்விடு தூது கூறும் 5 வண்ணங்கள் - வெள்ளை சிவப்பு கறுப்பு மஞ்சள் பச்சை
- நவரசம் என்பது - வீரம் அச்சம் இழிப்பு வியப்பு காமம் அவலம் கோபம் நகை சமநிலை
- ஒன்பது சுவை என்பது - நவரசம்
- அழகு 8 பெற்றுள்ளது - தமிழ் (அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு)
- தூது இலக்கியத்தின் வேறு பெயர்கள் - சந்து இலக்கியம், வாயில் இலக்கியம்
- தூது இலக்கியத்தின் பாவகை - கலிவெண்பா
- தமிழ்விடு தூது பாடல் யாருக்கு தூண்டுவதாக அமைந்துள்ளது? - மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர்க்கு
- தமிழ்விடு தூது பாடலில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை - 268 கண்ணிகள்
- தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் - 1930 உ.வே.சா.
- தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர் பெயர் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் என்று ஐம்பெரும் காப்பியங்களையும் தமிழ் அன்னைக்கு சூட்டி கவிதை இயற்றியவர் - கவியோகி சுத்தானந்த பாரதியார்
- Cyberspace என்பது - இணையவெளி
- ஆங்கிலத்தில் நேவி என்பது எம்மொழிச் சொல்? - தமிழ்ச் சொல்லாகிய நாவாய் என்பது
- உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது - கிரேக்க மொழி
- தமிழிலிருந்து கிரேக்கத்தில் வழங்கிவரும் சொற்கள்:
- தமிழ் கிரேக்கம்
- எறிதிரை எறுதிரான்
- கலன் கலயுகோய்
- நீர் நீரியோஸ்
- நாவாய் நாயு
- தோணி தோணீஸ்
- --------- சார்ந்த சொற்களை தமிழில் கிரேக்க மொழியிலும் ஒப்பாக காணமுடிகிறது - கவிதை சார்ந்த
- பா என்னும் தமிழ்ச்சொல் கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? - பாய்யியோனா
- அப்பல்லோ என்னும் கடவுளுக்கு பாடப்படுவதாக கிரேக்கத்தில் குறிப்பிடப்படும் பாவகை இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? - பா என குறிப்பிடப்படுகிறது
- வெண்பாவின் ஓசை - செப்பலோசை
- கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - சாப்போ
- சாப்போ என்பது கிரேக்கத்திலிருந்து லத்தீன் மொழிக்கு வந்தபின் ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது? - சேப்பிக் ஸ்டேன்சா
- பாவின் சுவைகளில் ஒன்றான துன்ப சுவையினை தமிழ் இலக்கணங்கள் எவ்வாறு சுட்டுகின்றன? - இளிவரல்
- கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - இளிகியா
- இலியாத்து காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது? - கிபி எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது
- கிரேக்க நூலின் பெயரிலேயே தமிழ்ச்சொல் இருப்பதாக கூறப்படும் நூல் பெயர் - எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் எனும் நூல்
- எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் என்பதன் பொருள் - கடலைச் சார்ந்த பெரிய புலம்
- கிரேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக வரவேண்டும் என்பதை குறிப்பிடும் நூல் எது? - கிரேக்க நூல் ஒன்று
- பட்ட மரம் என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் - கவிஞர் தமிழ் ஒளி
- கந்தம் என்பதன் பொருள் - மணம்
- கவிஞர் தமிழ் ஒளி பிறந்த ஊர் - புதுவை (1924 - 1965)
- பாரதியாரின் வழிதோன்றல் ஆகும் பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர் யார்? - கவிஞர் தமிழ் ஒளி
- பட்ட மரம் எனும் தலைப்பிலான கவிதை இடம் பெற்ற நூல் - தமிழ் ஒளியின் கவிதைகள்
- காவிரியின் பாதை எல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிற நூல் எது? - பெரியபுராணம்
- மா என்பதன் பொருள் - வண்டு
- தரளம் என்பதன் பொருள் - முத்து
- பணிலம், சுரி வளை என்பதன் பொருள் - சங்கு
- மாடு என்பதன் பொருள் - பக்கம்
- கோடு என்பதன் பொருள் - குளக்கரை
- சூடு என்பதன் பொருள் - நெல் அரிக்கட்டு
- வேரி என்பதன் பொருள் - தேன்
- அடியார் பெருமையை ஓரடியில் கூறும் நூல் - சுந்தரரின் திருத்தொண்டத் தொகை
- ஒவ்வொரு பாடலிலும் அடியாரின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ள நூல் - நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி
- திருத்தொண்டர் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி இவ்விரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - சேக்கிழாரின் பெரிய புராணம்
- ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு அடியாராக 63 அடியார்களின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்ட நூல் - திருத்தொண்டர் புராணம்
- சேக்கிழாரின் காலம் - கிபி 12ஆம் நூற்றாண்டு
- சேக்கிழார் எந்த அரசரின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார்? - சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில்
- பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று சேக்கிழாரை பாராட்டியவர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ என்று பாடியவர் - பாரதியார்
- நம் முன்னோர்கள் நீர்நிலைகளை உருவாக்குபவர்களை எவ்வாறு போற்றினர்? - உயிரை உருவாக்குபவர்கள்
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் புறநானூற்று பாடலை பாடியவர் யார்? - பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது
- சான்றோர் தெளிவாக ஆராய்ந்து தெளிந்த பொருட்களை பிறருக்கு எடுத்துரைப்பது - பொருண்மொழிக் காஞ்சித் துறை
- பண்டைய வேந்தர்களின் வீரம் வெற்றி கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் புலவர்கள் சான்றோர்கள் புலவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் கூறும் நூல் - புறநானூறு
- தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டு அடையாளமாக திகழும் நூல் - புறநானூறு
- குளம் தொட்டு கோடு பதித்து எனும் பாடல் இடம் பெற்ற நூல் - சிறுபஞ்சமூலம்
- தண்ணீர் எனும் சிறுகதை எழுதியவர் - கந்தர்வன்
- கந்தர்வனின் இயற்பெயர் - நாகலிங்கம்
- கந்தர்வனின் ஊர் - ராமநாதபுரம் மாவட்டம்
- கந்தர்வன் எங்கு பணியாற்றினார்? - தமிழ்நாடு அரசின் கருவூல கணக்குத் துறை
- புகார் நகரில் உள்ள அதிகம் தொடர்புடையதாக திகழ்ந்த விழா - இந்திர விழா
- காலத்தை கணக்கிட்டு சொல்லுபவர்கள் - காலக்கணிதர்கள்
- இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும்? - 28 நாட்கள்
- தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழும் நூல்கள் - மணிமேகலை சிலப்பதிகாரம்
- பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் எது? - மணிமேகலை ( மணிமேகலை துறவு)
- பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம் இது? - மணிமேகலை
- சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்த காப்பியம் எது? - மணிமேகலை
- மணிமேகலை நூலின் முதல் காதை எது? - விழாவறை காதை
- மணிமேகலையில் மொத்தம் அமைந்துள்ள காதைகள் எத்தனை? - முப்பது காதைகள்
- மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் யார்? - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன? - சாத்தன்
- திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் யார்? - சீத்தலை சாத்தனார்
- சீத்தலைச் சாத்தனார் செய்துவந்த தொழில் யாது? - கூலவாணிகம்
- கூலம் என்பதன் பொருள் என்ன? - தானியம்
- சீத்தலைச் சாத்தனார் யாருடைய சமகாலத்தவர்? - இளங்கோவடிகளின் சமகாலத்தவர் (நண்பர்)
- தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று சீத்தலைச் சாத்தனார் பாடியவர் யார்? - இளங்கோவடிகள்
- 1863 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்னும் தொல்லியல் அறிஞர் சென்னை பல்லாவரம் சென்னை மேட்டுப்பகுதியில் எலும்பையும் கருவியையும் கண்டுபிடித்தார் ( இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் இது)
- ரோமானியரின் பழங்காசுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன? - கோவையில்
- ரோமானியரின் மட்பாண்டங்கள் எங்கு கிடைத்தன? - அரிக்கமேடு அகழாய்வு
- ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1914
- இயற்கையை சுவைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளாக திகழும் ஆவணங்கள் யாவை? - தமிழர்களின் உணவு உடை வாழிடம் முதலியன
- பட்டிமன்றம் என்பதன் இலக்கிய வழக்கு இது? - பட்டி மண்டபம்
- பட்டிமண்டபம் என்னும் இலக்கிய வழக்கு காணப்படும் நூல்கள் - சிலப்பதிகாரம் மணிமேகலை திருவாசகம் மற்றும் கம்ப ராமாயணத்தின் பால காண்டம்
- பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று கூறும் இலக்கண நூல் - நன்னூல் (பவணந்தி முனிவர்)
- அகழாய்வு பணி துவங்கப்பட்ட ஆண்டு - 1863
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
- திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மலர்கள் - அனிச்ச மலர் குவளை மலர்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை மரம் மூங்கில் மரம்
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர் ( மலையத்துவசன் மகன்)
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
- திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது? - ஏழு இடங்களில்
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது? - எட்டுக் குறட்பாக்களில்
- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி யு போப்
- ஓ என் சமகாலத் தோழர்களே என்னும் கவிதை இயற்றியவர் - வைரமுத்து
- கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் - தேனி மாவட்டம் மெட்டூர்
- இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது பெற்றவர் - கவிஞர் வைரமுத்து
- கவிஞர் வைரமுத்துவுக்கு 2003ஆம் ஆண்டு எந்த புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது? - கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்துக்காக
- கவியரசு வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்? - 7 முறை பெற்றுள்ளார்
- கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்? - ஆறுமுறை
- இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் யார்? - தமிழ்நாட்டைச் சார்ந்த சிவன்
- இஸ்ரோவின் தலைவர் பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் என்னும் சிறப்பு பெற்றவர் யார்? - சிவன்
- 2015 விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளவர் யார்? - சிவன்
- இஸ்ரோவின் தலைவர் சிவனின் சொந்த ஊர் எது? - வல்லங்குமாரவிளை (கிராமம்) நாகர்கோவில்
- PSLV திட்டத்தை தொடங்க அரசாங்கம் இசைவு தந்த வருடம் எது? - 1983
- இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - விக்ரம் சாராபாய்
- ஆர்யபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவ காரணமாக இருந்தவர் யார்? - விக்ரம் சாராபாய்
- செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவியவர் - விக்ரம் சாராபாய்
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு செயல்பட்டு வருகிறது? - திருவனந்தபுரத்தில்
- யாருடைய முயற்சியினாலேயே இஸ்ரோ தொடங்கப்பட்டது? - விக்ரம் சாராபாய்
- முதன் முதலில் சிவன் உருவாக்கிய செயலி பெயர் என்ன? - சிதாரா
- யாராவது சிறியதாக சாதித்த வரை பெரியதாக பாராட்டியவர் யார்? - அப்துல் கலாம் அவர்கள்
- அப்துல் கலாம் அவர்கள் சிவனை எவ்வாறு அழைத்தார்? - மென்பொறியாளர் என்று
- இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் - அப்துல் கலாம் அவர்கள்
- அப்துல் கலாம் ஊர் எது? - தமிழ்நாட்டில் ராமேஸ்வரம்
- இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்? - அப்துல் கலாம் அவர்கள்
- அப்துல் கலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருது எது? - பாரத ரத்னா விருது
- ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைகோள்களை ஏவிய ஆண்டு எது? - 1957
- இதுவரை இந்தியாவுக்காக எத்தனை செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன? - 45 செயற்கைக்கோள்கள்
- 2015 தமிழ் நாடு அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்? - வளர்மதி ( அரியலூர்)
- வளர்மதி அவர்கள் எப்போது முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்? - 1984 முதல்
- 2012 உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார்? - வளர்மதி
- இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் யார்? - வளர்மதி
- கடல் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட செயலியின் பெயர் என்ன? - நேவிக் (NAVIC)
- நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட செயற்கை கோள் எது? - சந்திராயன் 1
- ரோவார் எனப்படும் ஆராயும்போது ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப உதவியினால் தானாகவே வெளிவந்து நிலவில் இறங்கி எத்தனை நாட்கள் பயணிக்கும்? - 14 நாட்கள்
- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குனர் யார்? - அருணன் சுப்பையா
- அருணன் சுப்பையாவின் ஊர் எது? - கோதைசேரி (ஏர்வாடி அருகே - திருநெல்வேலி மாவட்டம்)
- அருணன் சுப்பையா திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எப்போது பணியில் சேர்ந்தார்? - 1984
- 2013-ல் மங்கள்யான் செயற்கைகோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனராக இருப்பவர் யார்? - அருணன் சுப்பையா
- இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்? - மயில்சாமி அண்ணாதுரை
- மயில்சாமி அண்ணாதுரை பிறந்த ஊர் எது? - கோதவாடி என்னும் சிற்றூர் (கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம்)
- மயில்சாமி அண்ணாதுரை இதுவரை எத்தனை முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார்? - 5 முனைவர் பட்டங்கள்
- மயில்சாமி அண்ணாதுரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார்? - 1982 (தற்போது இயக்குனராக உள்ளார்)
- இந்தியா முதன் முதலில் நிலவுக்கு அனுப்பிய ஆய்வுக்களம் சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்? - மயில்சாமி அண்ணாதுரை (சந்திராயன் 2 திட்டத்திலும் பணியாற்றி வருகிறார்)
- சர் சி வி ராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் - மயில்சாமி அண்ணாதுரை
- தமது வாழ்வியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூலாக எழுதி உள்ளவர் யார்? - மயில்சாமி அண்ணாதுரை
- இஸ்ரோவில் எவ்வகையான திட்டங்கள் எப்போதும் இருக்கும்? - (3 ஆண்டுகள் 7 ஆண்டுகள் 15 ஆண்டுகள்) மூன்று வகையான திட்டங்கள்
- இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே - மறுமலர்ச்சி இலக்கியங்கள்
- குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூல் அமைந்துள்ளது உணர்த்துவது எது? - குடும்ப விளக்கு என்னும் நூல்
- குடும்ப விளக்கு நூல் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? - ஐந்து பகுதிகளாக
- பாடப் பகுதியில் அமைந்துள்ள கவிதைகள் எந்த பகுதியில் உள்ளவை? - இரண்டாம் பகுதியில் (விருந்தோம்பல் எனும் தலைப்பில்)
- பாரதிதாசனின் இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
- பாரதிதாசன் எழுதிய கவிதைகள் அனைத்தும் எந்த பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன? - பாரதிதாசன் கவிதைகள் எனும் பெயரில்
- பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது? - பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு
- பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றவர் - பாரதியார்
- மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றவர் - கவிமணி
- பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது என்றவர் - பாரதிதாசன்
- மனித வாழ்வை செழுமையாக்கும் அவை யாவை? - அற பண்புகள்
- பூவாதே காய்க்கும் மரமுள நன்றறிவார் - என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - சிறுபஞ்சமூலம்
- இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி - எடுத்துக்காட்டு உவமையணி
- தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றிய நூல்கள் யாவை? - நீதி நூல்கள்
- நீதி நூல்கள் எப்பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன? - பதினெண்கீழ்க்கணக்கு எனும் பெயரில்
- சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன? - ஐந்து சிறிய வேர்கள் என்பது
- ஐந்து சிறிய வேர்கள் - கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
- மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாக எத்தனை பாடல் எத்தனை கருத்துகள் சிறுபஞ்சமூலம் பாடலில் உள்ளன? - 5 கருத்துகள்
- எந்த நூலிலுள்ள பாடல்கள் நன்மை தருவன தீமை தருவன நகைப்புக்கு உரியன எனும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன? - சிறுபஞ்சமூலம்
- சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்? - காரியாசான்
- காரியாசான் யாருடைய மாணாக்கர்? - மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்
- காரியாசான் இயற்பெயர் என்ன? - காரி
- காரியாசான் என்பதில் தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர் எது? - ஆசான்
- காரியாசான் பாயிரச் செய்யுள் எவ்வாறு சிறப்பிக்கிறது? - மாக் காரியாசான் என்று
- 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் - வள்ளலார்
- 11 வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் - பாரதியார்
- 15 வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்திற்கு தனது கவிதைகளை எழுதி அனுப்பியவர் - விக்டர் ஹியூகோ
- 16வது வயதிலேயே தனது தந்தையின் போர்படை தளபதி ஆனவர் - மாவீரன் அலெக்சாண்டர்
- 17 வது வயதிலேயே பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் - விஞ்ஞானி கலிலியோ கலிலி
- நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் - என்று கூறியவர் யார்? - ஆபிரகாம் லிங்கன்
- மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது - சிரிப்பும் சிந்தனையும்
- இசையை போன்றே இதயத்தை பண்படுத்துவது இது? - நூல்கள்
- 2009 ஆம் ஆண்டு நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட எத்தனை ரூபாய் நாணயத்தை வெளியிட்டது? - ஐந்து ரூபாய் நாணயத்தை
- எந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது? - 2010
- இளைஞர்கள் உரிமைப்போர் படையின் ஈட்டி முனைகள் என்றவர் யார்? - அண்ணா
- எழுத்தாளரான அண்ணா அவை எவ்வாறு அழைத்தனர்? - தென்னாட்டு பெர்னாட்ஷா
- தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள் திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்? - அண்ணா
- 1935 சென்னை பெத்தநாயக்கன் பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றியவர் யார்? - அண்ணா
- அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் யாவை? - ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம் நாடு, திராவிட நாடு, மாலைமணி, காஞ்சி
- அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் யாவை? - குடியரசு, விடுதலை
- அண்ணா இருமொழி சட்டத்தை எப்போது உருவாக்கினார்? - முதலமைச்சராக பொறுப்பேற்றதும்
- சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்று மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் யார்? - அண்ணா
- அண்ணாவின் சிறுகதை திறன் எனும் ஆய்வு நூலை எழுதியவர் யார்? - முனைவர் பெ.குமார்
- ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்னும் புகழுக்குரிய நூலகம் எது? -- தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
- இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடம் எது? - தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
- உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது? - சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகம்
- இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரிய நூலகம் இது? - திருவனந்தபுரம் நடுவன் நூலகம்
- இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகவும், ஆவணக்காப்பக நூலகமாகவும் கல்கத்தாவில் 1836 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட தேசிய நூலகம் எது ? - கல்கத்தா தேசிய நூலகம்
- உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையை தாங்கி நிற்கும் உலகம் எது? - அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்
- யாருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 9ஆம் நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது? - சீர்காழி R. அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாள்
Subscribe to:
Posts (Atom)
ஏழாம் வகுப்பு தமிழ்
தமிழின் சிறப்புகள் கொல்லாமை - தமிழின் குறிக்கோள் பொய்யாமை - தமிழின் கொள்கை தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...
-
தனிநபர் தகவல் பிறப்பு திசம்பர் 10, 1878 இடம் தொரப்பள்ளி , சென்னை மாகாணம் , பிரித்தானிய இந்தியா ( இன்றைய தமிழ்நாட்டில் ) இந்தி...
-
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே - என்ற பாடல் வரிகள் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன் தமிழோவியம் என...
-
பண்டைய தமிழர் தனிமனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றிருந்தனர் என்பதை இதன் வாயிலாக அறியலாம்? இலக்கிய...