ஆறாம் வகுப்பு தமிழ் கேள்வி பதில்கள்
(பழைய பாடத்திட்டம்)
- கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்து - என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - திருவருட்பா
- திருவருட்பா பாடல்களை எழுதியவர் - ராமலிங்க அடிகளார் என்கின்ற திருவருட்பிரகாச வள்ளலார்
- வள்ளலார் பிறந்த ஊர் - கடலூர் மாவட்டம் மருதூர்
- வள்ளலாரின் பெற்றோர்கள் - ராமையா பிள்ளை, சின்னம்மையார்
- ஜீவகாருண்ய ஒழுக்கம் மனுமுறைகண்ட வாசகம் என்ற நூல்களை எழுதியவர் - வள்ளலார்
- வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன? - திருவருட்பா எனும் தலைப்பில்
- வள்ளலார் வழங்கிய நெறி எது? - சமரச சன்மார்க்க நெறி
- வள்ளலார் அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக ஆலய அமைப்பு இது? - சன்மார்க்க சங்கம்
- மக்களின் பசித்துயர் போக்கி உணவளிக்க அறச்சாலை அமைத்தவர் யார்? - வள்ளலார்
- மக்களின் அறிவு நெறி விளங்க வள்ளலார் தொடங்கி அமைப்பு இது? - ஞான சபை
- வள்ளலார் சத்திய தருமச்சாலை எங்கு தொடங்கினார்? - வடலூரில்
- வள்ளலார் வாழ்ந்த காலம் - 5.10.1823 - 30.1.1874
- வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் யாருடையது? - வள்ளலார் உடையது
- திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை? - முப்பால், பொதுமறை, தமிழ்மறை
- உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது? - திருக்குறள்
- திருவள்ளுவர் வாழ்ந்த காலம் இது? கிமு 31
- கோபம் என்பதன் தமிழ் சொல் என்ன? - சினம்
- ஆடிப்பெருக்கு நாளில் எதனை ஆற்றில் விட்டால் புண்ணியம் என்பது சாஸ்திரம்? - சுவடிகளை
- ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட்ட நிகழ்வு நடைபெற்ற ஊர் எது?- ஈரோடு மாவட்டம் கொடுமுடி
- பனை ஓலையை பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு என்ன பெயர்? - ஓலைச்சுவடிகள்
- ஓலைச்சுவடி எழுத்துக்களில் எவை எவை இருக்காது? - புள்ளி, ஒற்றை கொம்பு, இரட்டைக் கொம்பு
- ஓலைச்சுவடியில் உள்ள பேரன் எனும் சொல்லை எவ்வாறு படிப்பது? - பேரன, பெரன
- ஓலைச்சுவடியில் உள்ள வரிகளை எவ்வாறு பொருள் கொள்வர்? - முன்னும் பின்னும் உள்ள வரிகளைக் கொண்டு
- குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் எத்தனை வகையான பூக்களின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது? 99 வகையான பூக்கள்
- குறிஞ்சிப்பாட்டு எந்த நூல்களில் ஒன்று? - பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று
- குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் யார்? - கபிலர்
- எதனையும் அரைகுறையாக செய்ய விரும்பாத சுறுசுறுப்பான தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியை மேற்கொண்டவர் யார்? - உவேசா அவர்கள்
- உவேசா -ன் ஆசிரியர் பெயர் என்ன? - மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
- உவேசா என்பதன் பொருள் என்ன? - உத்தமதானபுரம் வேங்கட சுப்புவின் மகனார் சாமிநாதன்
- உவேசா வாழ்ந்த காலம் - 19.2.18 55 - 28.4. 1942
- உவேசா தன் வாழ்க்கை வரலாற்றை எந்த இதழில் தொடராக எழுதினார்? - ஆனந்த விகடன் இதழில்
- உவேசா தன் வாழ்க்கை வரலாற்றை என்ற தலைப்பில் நூலாக எழுதினார்? - என் சரிதம் என்னும் பெயரில்
- என் சரிதம் எனும் நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது? - இரண்டு தொகுதிகளாக
- உ வே சா மொத்தம் எத்தனை நூல்களை பதிப்பித்தார்? - 80 நூல்கள்
- எட்டுத்தொகை 8
- பத்துப்பாட்டு 10
- சீவக சிந்தாமணி 1
- சிலப்பதிகாரம் 1
- மணிமேகலை ஒன்று
- புராணங்கள் 12
- உலா 9
- தூது நூல்கள் 6
- கோவை 6
- வெண்பா நூல்கள் 13
- அந்தாதி 3
- பரணி 2
- மும்மணிக்கோவை 2
- இரட்டைமணிமாலை 2
- பிரபந்தங்கள் 4
- உ வே சா பெயரால் சென்னை பெசன்ட் நகரில் செயல்பட்டு வரும் நூல் நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு எது? 1942 ( ஆறாம் வகுப்பு) 1947 ( பத்தாம் வகுப்பு)
- உ வே சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பெரிதும் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் யார் யார்? - ஜி யு போப், ஜூலியல் வின்சோன்
- உ வே சாவுக்கு மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு? - 2006
- உவேசா பிறந்த ஊர் எது? - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
- உவேசாவின் சிறப்பு பெயர் என்ன? - தமிழ் தாத்தா
- கடைசிவரை நம்பிக்கை என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? - அரவிந்த் குப்தா
- கடைசி வரை என்ற சிறுகதை இடம் பெற்ற நூல் எது? - டென் லிட்டில் பிங்கர்ஸ்
- ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 2 லட்சம் ஜப்பானியர்
- ஜப்பானியர் வணங்கும் பறவை எது? - கொக்கு
- காகிதத்தில் ஆயிரம் கொக்குகள் செய்தால் நோய் குணமாகும் என்பது யாருடைய நம்பிக்கை? - ஜப்பானியர்கள் நம்பிக்கை
- காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைத்தனர்? - ஒரிகாமி
- சடகோ செய்த மொத்த கொக்குகள் எவ்வளவு? - 644 கொக்குகள்
- கடவுளின் தோழிகள் எத்தனை கொக்குகள் செய்தனர்? - 356 கொக்குகள்
- சடகோவின் தோழி பெயர் என்ன? - சிசுகோ
- குழந்தைகள் அமைதி நினைவாலயம் எங்கு உள்ளது ? - ஹிரோஷிமா நகரின் மையத்தில்
- குழந்தைகள் அமைதி நினைவாலயம் எழுதியுள்ள வாசகம் என்ன? - உலகத்தில் அமைதி வேண்டும்! இஃது எங்கள் கதறல்! இஃது எங்கள் வேண்டுதல்!
- குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டப்பட்டது? - சடகோ நினைவாக
- சடகோ எந்த ஆண்டு எது? - 1955 அக்டோபர் 25
- நாம் பேசும் மொழியை, எழுதும் மொழியை முறையாக புரிந்து கொள்ள என்ன தேவை? - இலக்கணம் தேவை
- “அ” என்னும் எழுத்து எதனை குறிக்கிறது? - மனிதனை
- நட்பு எழுத்துக்களை என்று இலக்கணம் குறிப்பிடுகிறது? - இன எழுத்துக்கள்
- டேரிபாக்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - கனடா
- டேரிபாக்ஸ் என்பவர் என்ன விளையாட்டு வீரர்? - கால்பந்தாட்டம்
- டேரிபாக்ஸ் எந்த நோயினால் பாதிக்கப்பட்டு தனது வலது காலை இழந்தார்? - புற்றுநோய்
- கனடாவின் சாலைகளில் தொடர் ஓட்டம் ஓட டேரிபாக்ஸ் முடிவு செய்ய காரணம் என்ன? - புற்று நோயாளிகள் நல்வாழ்வுக்காக நிதி திரட்ட
- டேரிபாக்ஸ் எத்தனை நாட்கள் தொடர் ஓட்டம் ஓடினார்? - 143 நாட்கள்
- டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படும் நாள் எது? - செப்டம்பர் 15ஆம் நாள்
- சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு கூடைப்பந்தாட்டம் விளையாடி பல பரிசுகளை வென்றவர் யார்? - டேரிபாக்ஸ்
- நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணியராயினும் - பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? - நாலடியார்
- நாலடியார் நூல் யாரால் எழுதப்பட்டது? - சமண முனிவர்
- சிறந்த நட்புக்கு நாலடியார் கூறும் விளக்கம் யாது? - வாய்க்கால்
- நாலடியார் எந்த நூல்களுள் ஒன்று? - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் இது? - நாலடியார்
- நாலடியாரில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை? - 400 பாடல்கள்
- சங்க நூல்கள் எனப்படுபவை எவை? - பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
- பதினெண் மேல் கணக்கு நூல்கள் யாவை? - பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
- பதினெண் என்பதன் பொருள் என்ன? - 18
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலானவை என்ன நூல்கள்? - பெரும்பாலானவை அறநூல்கள்
- பாரத தேசம் என்னும் பாடலின் ஆசிரியர் யார்? - பாரதியார்
- ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியவர் யார்? - பாரதியார்
- உழு படை என்பதன் பொருள் என்ன? - வேளாண்மை செய்ய பயன்படும் கருவிகள்
- சாதி இரண்டொழிய வேறில்லை என்பது யாருடைய சொல்? - அவ்வையின் வாக்கு
- தமிழ் மகள் என அழைக்கப்படுபவர் யார்? - அவ்வையார்
- பாட்டுக்கொரு புலவன் என கொண்டாடப்படுபவர் யார்? - பாரதியார்
- கனவு காண்பதில் இவருக்கு இணையாக கனவு காண்பவர் யாரும் இல்லை? - பாரதியார்
- ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்னும் பாடல் வரி எந்த பாடலிலும் ஒரு பகுதியாகும்? - வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் இந்த பாடலின் ஒரு பகுதி ஆகும்
- பாரதியார் வாழ்ந்த காலம் எது? - 11/12/1882 - 11/9/1921
- தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது? - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் என்ற சிற்றூரில்
- பருவநிலை மாறும் போது பறவைகள் இடம் விட்டு இடம் பெயரும் அதற்கு என்ன பெயர்? - வலசை போதல்
- உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்தின் பெயர் என்ன? - பறவைகள் புகலிடம்
- நிலத்திலும் அடர் உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழும் கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் தன்மையுடைய பறவை எது? - பூநாரை
- வெயிலும் மழையும் பனியும் மாறி மாறி வருவதை என்னவென்று கூறுவர்? -பருவநிலை மாற்றம்
- பருவகால மாற்றத்தை உணர்த்துவன எது? - பறவைகள்
- உலகம் முழுவதும் எவற்றைப் பரப்ப வேலைகளை பறவைகள் செய்கின்றன? - மரம் செடி கொடிகளை
- மனிதனின் நல்ல நண்பன் எது? - பறவைகள்
- உழவனின் நல்ல நண்பன் எது? - பாம்பு
- தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வகை பறவைகள் உள்ளன? - 2400 வகைப் பறவைகள்
- பறவைகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? - ஐந்து வகையாக
- பறவைகளின் வாழும் இடங்கள் எவை? - மரங்கள்
- தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள் எத்தனை? - 13
- சமவெளி மரங்களில் வாழும் பறவைகள் யாவை? - மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி
- நீர்நிலைகளில் வாழும் பறவைகள் யாவை? - கொக்கு, தாழைக்கோழி, பவளக்காளி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், ஊசிவால் வாத்து
- மலைகளில் வாழும் பறவைகள் யாவை? - இருவாட்சி, செந்தலைபூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன் முதுகு, மரங்கொத்தி, சின்ன குறுவான் , கொண்டை உழவாரன், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை
- பாம்பு எந்த வகையைச் சார்ந்தது? - ஊர்வன வகை
- உலகம் முழுக்க எத்தனை வகை பாம்புகள் இருக்கின்றன? - 2750 வகைகள்
- எத்தனை வகை பாம்புகள் மட்டுமே நச்சுத் தன்மை கொண்டவை? - 52 வகைபாம்புகள் மட்டுமே
- பாம்பினம் உலகம் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது? - பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது
- உலகிலேயே மிகவும் நீளமான நஞ்சு மிக்க பாம்பு எது? - இராஜநாகம்
- ராஜநாகம் பாம்பின் நீளம் எவ்வளவு? - 15 அடி
- கூடுகட்டி வாழும் பாம்பு எது? - ராஜநாகம்
- பாம்பு அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுவது எதற்காக? - சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ள
- கோப்ராக்சின் என்னும் வலி நீக்கும் மருந்து செய்ய பயன்படுவது எது? - நல்ல பாம்பின் நஞ்சு
- தோலுக்காக பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க இந்திய அரசு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றியுள்ளது? - 1972 ன் படி
- பாம்புகள் எங்கு நெஞ்சம் வைத்திருக்கின்றன? - பற்களில்
- பாம்புகள் காது உண்டா? - காது அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை
- பாம்புகள் எதனை வைத்து முன்னெச்சரிக்கையாக இருக்கின்றன? - தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து
- தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? - 30
- தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை? - 216
- பேச்சிலும் எழுத்திலும் அதிகம் பயன்படுத்தும் எழுத்துகள் யாவை? - கி, சி, பி, டி, தி, மி
- தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துக்கள் - உடனிலை மெய்மயக்கம் எனப்படும்
- தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் மட்டும் சேரும் எழுத்துக்கள் - வேற்றுநிலை மெய்மயக்கம்
- பழங்காலக் கொல்லுப்பட்டறைகள் மறவர்களுக்கு வடித்து கொடுத்தவை எவை? - வில், வேல், வாள், ஈட்டி, கேடயம்
- பழங்காலக் கொல்லுப்பட்டறைகள் உழவர் பெருமக்களுக்கு செய்து அளித்த பொருள்கள் எவை? - அச்சு, கடையாணி, அரிவாள், கோடாரி, கத்தி, கடப்பாரை
- வேளாண் கருவிகள் எவை? - அரிவாள், கோடாரி, கத்தி, கடப்பாரை
- பழந்தமிழர் யோகக் கலைக்கு மாபெரும் எடுத்துக்காட்டாக இன்றளவும் பறைசாற்றி நிற்பது எது? - கூரம் நடராசர் செப்புத்திருமேனி
- பழங்காலக் கொல்லுப்பட்டறைகள் சங்கத் தமிழ்ப் புலவர்களுக்கு செய்து அளித்த பொருள்கள் எவை? - எழுத்தாணிகள்
- சாலையோரங்களில் புளியமரத்தடியில் ஓலைகளால் வேயப்பட்டு கொட்டகைகளில் இயங்கிவந்த தொழில் கூடங்கள் எவை? - இரும்பு கொல்லுப்பட்டறைகள்
- நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் யார்? - விளம்பிநாகனார்
- மனைக்கு விளக்கம் மடவார்; மடவார் தனக்கு தகைசால் புதல்வர்; - என்னும் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது? - நான்மணிக்கடிகை
- நான்மணிக்கடிகை எந்த நூல்களுள் ஒன்று? - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- கடிகை என்பதன் பொருள் என்ன? - அணிகலன்
- நான்மணிக்கடிகை என்பதன் பொருள் என்ன? - நான்கு மணிகள் கொண்ட அணிகலன்
- நான்மணிக் கடிகையில் ஒவ்வொரு பாடலும் எத்தனை அறக்கருத்துகளை கூறுகின்றன? - 4
- விளம்பிநாகனார் இன் இயற்பெயர் என்ன? - நாகனார்
- விளம்பி என்பது எதனைக் குறிக்கும்? - ஊரைக் குறிக்கும்
- வீட்டிற்கு அழகு எது? - பெண்கள்
- பெண்ணுக்கு விளக்கு போன்றவர்கள் யார்? - பண்பில் சிறந்த அவள் குழந்தைகள்
- குழந்தைகளுக்கு விளக்கு போன்றது இது? - கல்வி
- கல்விக்கு விளக்கு போன்றது இது? - கற்றவர்களிடம் உள்ள நல்லெண்ணங்கள்
- தாளில் எழுதாத பாடல்கள் எனவெனப்படுகின்றன? - நாட்டுப்புற பாடல்
- எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய் வழியாக பரவுகின்ற பாட்டு இது? - நாட்டுப்புறப்பாட்டு
- எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் இவற்றை என்னவென்று கூறுவார்கள்? - வாய்மொழி இலக்கியம்
- நாட்டுப்புற பாடல்கள் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது? - கிராமிய பாடல்கள்
- சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் பாடிய நாட்டுப்புற பாடல்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றது? - கானா பாடல்
- கொழுக்கட்டை கொழுக்கட்டை ஏன் வேகல - எனும் பாடல் இவ்வகை பாடல்? - விளையாட்டு பாடல்
- நாட்டுப்புற பாடல்கள் எத்தனை வகைப்படும்? - ஏழு வகை
- பிறந்த குழந்தைக்கு பாடும் பாடல் - தாலாட்டு பாடல்
- வளர்ந்த பிள்ளைகள் பாடும் பாடல் - விளையாட்டு பாடல்
- களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடும் பாடல் - தொழில் பாடல்
- திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது எவ்வகை பாடல்? - சடங்கு பாடல் மற்றும் கொண்டாட்ட பாடல்
- சாமி கும்பிட பாடும் பாடல் - வழிபாட்டு பாடல்
- இறந்தோர்க்கு படுவது - ஒப்பாரி பாடல்
- கொழும்பில கூடாரம் - உங்க மாமா கொத்தமல்லி வியாபாரம் - எனும் பாடல் எவ்வகை பாடல்? - தாலாட்டு பாடல்
- சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு - எனும் பாடல் எவ்வகை பாடல்? - விளையாட்டு பாடல்
- ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா - எனும் பாடல் எவ்வகை பாடல்? - விழிப்புணர்வு பாடல்
- வீரச் சிறுவன் எனும் சிறுகதை ஆசிரியர் யார்? - ஜானகிமணாளன்
- வீரச்சிறுவன் சிறுகதை இந்தக் கதைத் தொகுப்பில் உள்ளது? - அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்
- வீரச்சிறுவன் சிறுகதை யாரைப் பற்றி குறிப்பிடுகிறது? - சுவாமி விவேகானந்தர்
- சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன? - நரேந்திரதத்
- ஆனம் என்பதன் பொருள் என்ன? - குழம்பு
- நாழி என்பதன் பொருள் என்ன? - தானியங்களை அளக்கும் படி
- அகவிலை என்பதன் பொருள் என்ன? - தானிய விலை
- கூடாரம் இடுவது என்பதன் பொருள் என்ன? - தங்குவது
- சொலவடைகள் என்பதன் பொருள் என்ன? - பழமொழிகள்
- நாட்டுப்புற பாடல்கள் பழமொழிகள் விடுகதைகள் இவற்றைப் படித்தால் தமிழில் எதனை உருவாக்கலாம்? - பெரியதொரு சொற்களஞ்சியத்தை
- பழந்தமிழர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் எவ்வாறு அமைந்திருக்கும்? - ஏதேனும் ஒரு நல்ல நோக்கத்தில்
- பழந்தமிழனின் வழிபாட்டு முறைகளில் ஒன்று - வீரவணக்கம்
- போரில் விழுப்புண் பட்டு நெஞ்சில் வேல் பாய்ந்து இறந்த வீரர்களை தமிழர் எவ்வாறு போற்றினர்? - தெய்வமாகப் போற்றினர்
- இந்தியாவின் அழகு அதன் பன்மைத்தன்மையில் தான் உள்ளது
- தான் ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவராக இருந்தாலும் ஏனைய குழுக்களையும் மதித்தும் இசைந்தும் வாழ்வதையே எவ்வாறு அழைக்கின்றோம்? - பன்மைச் சமூகம்
- ஒரு வகை என்பது இயற்கையின் நியதி இல்லை; பலவகை அல்லது பன்மை தான் இயற்கை