ஒன்பதாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் கேள்வி பதில்கள் PART 2





ஒன்பதாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் கேள்வி பதில்கள்


  1. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே -  என்ற பாடல் வரிகள் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன்
  2. தமிழோவியம் எனும் தலைப்பில் பாடலை இயற்றியவர் -  ஈரோடு தமிழன்பன்
  3. தமிழோவியம் என்னும் நூலை எழுதியவர் - ஈரோடு தமிழன்பன்
  4. ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று கூறியவர்  - ஈரோடு தமிழன்பன்
  5. ஹைக்கூ சென்ரியு லிமரைக்கூ என புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை எழுதியவர் - ஈரோடு தமிழன்பன்
  6. ஈரோடு தமிழன்பன் எழுதிய எந்த கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது -  வணக்கம் வள்ளுவ
  7. தமிழக அரசின் பரிசு பெற்ற தமிழன்பனின் நூல் - தமிழன்பன் கவிதைகள்
  8. தமிழன்பனின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள  மொழிகள் - ஹிந்தி உருது மலையாளம் ஆங்கிலம்
  9. உலகத் தாய்மொழி நாள் -  பிப்ரவரி 21
  10. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறிய நூல் -  பிங்கல நிகண்டு
  11. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் -  சிங்கப்பூர் இலங்கை
  12. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது
  13. எங்கும் காணோம் என்று பாடியவர் - பாரதியார்
  14. தமிழின் இனிமை இலக்கியவளம் பாச்சிறப்பு சுவை அழகு திறம் தகுதி ஆகியன விரவியுள்ள சிற்றிலக்கியம் -  தமிழ்விடு தூது
  15. தித்திக்கும் தெள்அமுதாய் தெள்ளமுதின் மேலான  என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் - தமிழ்விடு தூது
  16. மூன்று இனம்  என்பவை - துறை தாழிசை விருத்தம்
  17. இரண்டு கண்களை போல் எழுந்து எழுந்து பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு பெயர்  - கண்ணி
  18. தமிழில் இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை - கண்ணி  
  19. முக்குணம் -  சத்துவம்,  ராசசம், தாமசம்
  20. அமைதி மேன்மை ஆகியவற்றை சுட்டும் குணம்  - சத்துவம்
  21. போர் தீவிரமான செயல்களை  குறிக்கும் குணம் - ராசசம்
  22. சோம்பல்  தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம் -  தாமசம்
  23. பத்து குண  அணிகள் - செறிவு, தெளிவு,  சமநிலை, இன்பம், ஒழுகிசை உதாரம், உய்த்தலில்  பொருண்மை, காந்தம், வலி, சமாதி
  24. தமிழ்விடு தூது கூறும் 5 வண்ணங்கள் -  வெள்ளை சிவப்பு கறுப்பு மஞ்சள் பச்சை
  25. நவரசம் என்பது -  வீரம் அச்சம் இழிப்பு வியப்பு காமம் அவலம் கோபம் நகை சமநிலை
  26. ஒன்பது சுவை என்பது -  நவரசம்
  27. அழகு 8 பெற்றுள்ளது -  தமிழ் (அம்மை,  அழகு, தொன்மை, தோல்,  விருந்து, இயைபு, புலன்,  இழைபு)
  28. தூது இலக்கியத்தின் வேறு பெயர்கள் - சந்து இலக்கியம், வாயில் இலக்கியம்  
  29. தூது இலக்கியத்தின் பாவகை -  கலிவெண்பா
  30. தமிழ்விடு தூது பாடல் யாருக்கு தூண்டுவதாக அமைந்துள்ளது? -  மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர்க்கு
  31. தமிழ்விடு தூது பாடலில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை - 268 கண்ணிகள்
  32. தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர்  - 1930  உ.வே.சா.
  33. தமிழ்விடு தூது  நூலின் ஆசிரியர் பெயர் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  34. காதொளிரும்  குண்டலமும் கைக்கு வளையாபதியும் என்று ஐம்பெரும் காப்பியங்களையும் தமிழ் அன்னைக்கு சூட்டி  கவிதை இயற்றியவர் - கவியோகி சுத்தானந்த பாரதியார்
  35. Cyberspace என்பது -  இணையவெளி
  36. ஆங்கிலத்தில் நேவி என்பது எம்மொழிச் சொல்? - தமிழ்ச் சொல்லாகிய நாவாய் என்பது
  37. உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது  - கிரேக்க மொழி
  38. தமிழிலிருந்து கிரேக்கத்தில் வழங்கிவரும் சொற்கள்:
    1. தமிழ் கிரேக்கம்
    2. எறிதிரை   எறுதிரான்
    3. கலன் கலயுகோய்
    4. நீர் நீரியோஸ்
    5. நாவாய் நாயு
    6. தோணி   தோணீஸ்
  39. --------- சார்ந்த சொற்களை தமிழில் கிரேக்க மொழியிலும் ஒப்பாக காணமுடிகிறது -  கவிதை சார்ந்த
  40. பா என்னும் தமிழ்ச்சொல் கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில்  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? - பாய்யியோனா
  41. அப்பல்லோ என்னும் கடவுளுக்கு பாடப்படுவதாக கிரேக்கத்தில் குறிப்பிடப்படும் பாவகை  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? - பா என குறிப்பிடப்படுகிறது
  42. வெண்பாவின் ஓசை -  செப்பலோசை
  43. கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - சாப்போ
  44. சாப்போ என்பது கிரேக்கத்திலிருந்து லத்தீன் மொழிக்கு வந்தபின் ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது? - சேப்பிக் ஸ்டேன்சா
  45. பாவின் சுவைகளில் ஒன்றான  துன்ப சுவையினை தமிழ் இலக்கணங்கள் எவ்வாறு சுட்டுகின்றன? - இளிவரல்
  46. கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - இளிகியா
  47. இலியாத்து காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது? -  கிபி எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது
  48. கிரேக்க நூலின் பெயரிலேயே தமிழ்ச்சொல் இருப்பதாக கூறப்படும் நூல் பெயர் -  எறிதிரேசியன்  ஆப் த பெரிபுலஸ்  எனும் நூல்
  49. எறிதிரேசியன்  ஆப் த பெரிபுலஸ்  என்பதன் பொருள் - கடலைச் சார்ந்த பெரிய புலம்
  50. கிரேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக வரவேண்டும் என்பதை குறிப்பிடும் நூல் எது? -  கிரேக்க நூல் ஒன்று
  51. பட்ட மரம் என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் -  கவிஞர் தமிழ் ஒளி
  52. கந்தம் என்பதன் பொருள் -  மணம்
  53. கவிஞர் தமிழ் ஒளி  பிறந்த ஊர் - புதுவை (1924 - 1965)
  54. பாரதியாரின் வழிதோன்றல் ஆகும் பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர் யார்? - கவிஞர் தமிழ் ஒளி
  55. பட்ட மரம் எனும் தலைப்பிலான கவிதை இடம் பெற்ற நூல் - தமிழ் ஒளியின் கவிதைகள்
  56. காவிரியின் பாதை எல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிற நூல் எது? - பெரியபுராணம்
  57. மா என்பதன் பொருள் -  வண்டு
  58. தரளம் என்பதன் பொருள் - முத்து
  59. பணிலம், சுரி வளை என்பதன் பொருள்  - சங்கு
  60. மாடு என்பதன் பொருள் - பக்கம்
  61. கோடு என்பதன் பொருள் - குளக்கரை
  62. சூடு என்பதன் பொருள்  - நெல் அரிக்கட்டு
  63. வேரி என்பதன் பொருள் - தேன்
  64. அடியார் பெருமையை ஓரடியில்  கூறும் நூல் - சுந்தரரின் திருத்தொண்டத் தொகை
  65. ஒவ்வொரு பாடலிலும் அடியாரின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ள நூல் -  நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி
  66. திருத்தொண்டர் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி இவ்விரு  நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - சேக்கிழாரின் பெரிய புராணம்
  67. ஒவ்வொரு புராணத்திலும்  ஒவ்வொரு அடியாராக 63 அடியார்களின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்ட நூல் -  திருத்தொண்டர் புராணம்
  68. சேக்கிழாரின் காலம் -  கிபி 12ஆம் நூற்றாண்டு
  69. சேக்கிழார் எந்த அரசரின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார்? - சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில்
  70. பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று  சேக்கிழாரை பாராட்டியவர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
  71. வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ என்று பாடியவர் -  பாரதியார்
  72. நம் முன்னோர்கள் நீர்நிலைகளை உருவாக்குபவர்களை எவ்வாறு போற்றினர்? -  உயிரை உருவாக்குபவர்கள்
  73. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் புறநானூற்று பாடலை பாடியவர் யார்? - பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது
  74. சான்றோர் தெளிவாக ஆராய்ந்து தெளிந்த பொருட்களை பிறருக்கு எடுத்துரைப்பது -  பொருண்மொழிக் காஞ்சித் துறை
  75. பண்டைய வேந்தர்களின் வீரம் வெற்றி கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் புலவர்கள் சான்றோர்கள் புலவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் கூறும் நூல் -  புறநானூறு
  76. தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டு அடையாளமாக திகழும் நூல் -  புறநானூறு
  77. குளம் தொட்டு  கோடு பதித்து எனும் பாடல் இடம் பெற்ற நூல் -  சிறுபஞ்சமூலம்
  78. தண்ணீர் எனும் சிறுகதை எழுதியவர் -  கந்தர்வன்
  79. கந்தர்வனின் இயற்பெயர் -  நாகலிங்கம்
  80. கந்தர்வனின் ஊர் -  ராமநாதபுரம் மாவட்டம்
  81. கந்தர்வன் எங்கு பணியாற்றினார்? -  தமிழ்நாடு அரசின் கருவூல கணக்குத் துறை
  82. புகார் நகரில் உள்ள அதிகம் தொடர்புடையதாக திகழ்ந்த விழா -  இந்திர விழா
  83. காலத்தை கணக்கிட்டு சொல்லுபவர்கள் -  காலக்கணிதர்கள்
  84. இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும்? -  28 நாட்கள்
  85. தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத்   திகழும் நூல்கள் - மணிமேகலை சிலப்பதிகாரம்
  86. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் எது? -  மணிமேகலை ( மணிமேகலை துறவு)
  87. பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம் இது? -  மணிமேகலை
  88. சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்த காப்பியம் எது? -  மணிமேகலை
  89. மணிமேகலை நூலின் முதல்  காதை எது? - விழாவறை காதை  
  90. மணிமேகலையில் மொத்தம் அமைந்துள்ள காதைகள் எத்தனை? -  முப்பது காதைகள்
  91. மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் யார்? -  கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  92. சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன? -  சாத்தன்
  93. திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் யார்? -  சீத்தலை சாத்தனார்
  94. சீத்தலைச் சாத்தனார் செய்துவந்த தொழில் யாது? - கூலவாணிகம்
  95. கூலம் என்பதன் பொருள் என்ன? -  தானியம்
  96. சீத்தலைச் சாத்தனார் யாருடைய சமகாலத்தவர்? - இளங்கோவடிகளின் சமகாலத்தவர் (நண்பர்)
  97. தண்டமிழ் ஆசான்,  சாத்தன், நன்னூற்புலவன்  என்று சீத்தலைச் சாத்தனார் பாடியவர் யார்? -  இளங்கோவடிகள்
  98. 1863 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்னும் தொல்லியல் அறிஞர் சென்னை பல்லாவரம் சென்னை மேட்டுப்பகுதியில் எலும்பையும் கருவியையும் கண்டுபிடித்தார் ( இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் இது)
  99. ரோமானியரின் பழங்காசுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன? -  கோவையில்
  100. ரோமானியரின் மட்பாண்டங்கள் எங்கு கிடைத்தன? -  அரிக்கமேடு அகழாய்வு

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...