பன்னிரு திருமுறைகளும் 12 ஆழ்வார்களும்


 



  • தமிழை பக்தி மொழி இரக்கத்தின் மொழி என்று சொன்னவர் -  தனிநாயகம் அடிகள்

 

பல்லவர் காலம்:

·        சமய மறுமலர்ச்சிக் காலம்

·         பக்தி இலக்கிய காலம்

·         பக்தி இயக்க  காலம்

 

 

 

 

·        சைவ சமயப் பெரியவர்கள் பாடிய பாடல்கள் திருமுறைகள் எனப்படும்

 

 

·        1 , 2, 3 திருமுறைகள் -  திருஞானசம்பந்தர் (சம்பந்தர் தேவாரம்)

·        4, 5 , 6 திருமுறைகள் -  திருநாவுக்கரசர் (தேவாரம்)

·        7ம் திருமுறை -  சுந்தரர் (சுந்தரர் தேவாரம்)

·        8ம் திருமுறை -  மாணிக்கவாசகர் 

o   திருவாசகம் மற்றும்  திருக்கோவையார்

·        ஒன்பதாம் திருமுறை -  9 பேர்

·         பத்தாம் திருமுறை -  திருமூலர்

·        பதினொன்றாம் திருமுறை - திரு ஆலவாய் உடையார்

·        பன்னிரண்டாம் திருமுறை - சேக்கிழார் (பெரியபுராணம்)

 

 

 

 

 

  • திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
    • இவர் 11 திருமுறைகளை மட்டுமே தொகுத்தார்
    • பெரியபுராணம் பின்னால் எழுதப்பட்டது
  • திருமுறைகளைதொகுப்பித்தவன் முதலாம் ஆதித்த சோழன்
  • முதலாம் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் எனப்படுகிறான்
  • முதல் ஏழு திருமுறைகள் மூவர்  தேவாரம்  எனப்படும்
  • இதற்கு மூவர் தமிழ் என்று வேறு பெயரும் உண்டு
  • திருஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர்சுந்தரர் - மூவர் முதலிகள்எனப்படுவர்
  • மூவர் முதலிகளின் முதல் 2 திருமுறை அனைத்தும் இசை பாடல்கள்
  •  திருமுறை இசைப் பாடல்மிகுதி

 

சைவ சமயக் குரவர்கள் நால்வர்

1.  திருஞானசம்பந்தர்

2.  திருநாவுக்கரசர்

3. சுந்தரர்

4. மாணிக்கவாசகர்


குரவர்கள்  என்பதற்கு பெரியவர்கள் என்று பொருள்

  • பன்னிரு திருமுறைகளையும் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்
  •  சைவர்களின் தமிழ் வேதம் என்று அழைக்கப்படுவது பன்னிரு திருமுறைகள்





திருஞானசம்பந்தர்

 

  • இயற்பெயர் : ஆளுடைய பிள்ளை
  •  பெற்றோர் -  சிவபாத இருதயர் - பகவதி அம்மையார்
  • பிறந்த ஊர் -  சீர்காழி (தோணிபுரம்பிரமபுரம்வேணுபுரம்)
  • சைவ சமயக் குரவர்களில் முதலாமவர்
  •  தேவாரத்தின் முதல் நூலை பாடியவர்
  • சிறப்பு பெயர்:
    •  பரசமயகோளரி

 

  • சிறப்பு:
    • 23 இசைகளில் பாடியுள்ளார்
    • 220 ஊர்களுக்குச் சென்று பாடியுள்ளார்
  • திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சந்தித்துக் கொண்ட இடம்திருப்புகலூர் (முதன் முதலில்)
  • சமணர்களை புனல் வாதத்தில் மற்றும் அனல் வாதத்தில் வென்றுபாண்டியனை சைவ சமயத்திற்கு மாற்றியவர்
  • திருஞானசம்பந்தர் பல்லாக்கினை திருநாவுக்கரசர் சுமந்த இடம்திருப்பூந்துருத்தி (அப்போது திருநாவுக்கரசர் அப்பர் என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பட்டார்)
  • கூன் பாண்டியன்  வெப்பு நோயைப் போக்கி நின்றசீர் நெடுமாறன்எனப்பட்டார்
  • மணக்கோலத்துடன் இறைவனடி சேர்ந்தார்

 

 

 

 



திருஞானசம்பந்தரின் சிறப்புகள் :

 

  • யாழ்முறி இவருக்கு மட்டுமே உரியது
  • இயற்கை அதிகமாக பாடியவர்
  • திராவிட சிசு - ஆதிசங்கரர்
  • முருகனின் அவதாரமாக போற்றப்படுபவர்
  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் - சுந்தரர்

 



திருநாவுக்கரசர்



  • இயற்பெயர்:  மருள் நீக்கியார்
  • பெற்றோர் :  புகழனார்மாதினியார்
  • அக்கா :  பகவதியார்
  • பிறந்த ஊர்திருவாமூர்
  • சிறப்பு பெயர்கள்:  
    •  திருநாவுக்கரசர் (பதிகத் தொடை பாடியதால்)
    • வாகீசர் (வடமொழி பெயர்)
    • அப்பர்
    • ஆளுடைய அரசு (இறைவனுக்கு அடிமை செய்ததால்)
    • தாண்டக வேந்தர் (தாண்டகம் என்னும் செய்யுள் வகை பாடியதால்)
    • தருமசேனர் (சமண சமயத்தில் வளமை பெற்று விளங்கியது)

 



திருநாவுக்கரசர் சிறுகுறிப்பு :

  • சமண சமயத்திலிருந்து (தமக்கை திலகவதியார்சைவ சமயத்திற்கு மாற்றியவர்
  • முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் .
  • கல்லையே தெப்பமாகக் கொண்டு கரை ஏறியவர்
  • திருநாவுக்கரசரை தெய்வமாக வழிபட்டவர் அப்பூதியடிகள்

 









சுந்தரர்

இயற்பெயர்:  நம்பி ஆரூரார் / ஆரூரார்

பெற்றோரோர்சடையனார் - மாதினியார்

திருமுனைப்பாடி மன்னர் நரசிங்க முனையர் என்பவரால் மகனாக

வளர்க்கப்பட்டார்

 

·        சிறப்பு பெயர்கள் :

o   வன் தொண்டர்

o   தம்பிரான் தோழர்

  • இறைவனையே மனைவியிடம் தூது அனுப்பியதாக வன்தொண்டர்எனப்பட்டார்
  • இறைவனுக்கு தோழனாக தம்பிரான் தோழர்  -(தம்பிரான் (சிவன்)



 

திருத்தொண்டத்தொகை பாடியவர் சுந்தரர்

 

சேரமான் பெருமாள் நாயனாரின் நண்பர் சுந்தரர்

 

(ஆதி உலா என்ற திருக்கயிலாய நாதர் உலா பாடியவர் சேரமான் பெருமாள் நாயனார்)










மாணிக்கவாசகர்

இயற்பெயர் தெரியவில்லை

பெற்றோர் :  சம்புபாதசாரியார் -  சிவஞானவதி

அந்தணர் குலம்



சிறப்பு பெயர்கள்

  • அருள் வாசகர்
  • மணிவாசகர்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • தென்னவன் பிரமராயர்
  • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )



சிறப்புகள் :

இளங்கோவடிகளுக்கு பிறகு நாட்டுப்புற பாடல் வடிவங்களுக்கு முதன்மை கொடுத்தவர் மாணிக்கவாசகர்



திருக்கோவையாரும் திருவாசகமும் இவர் பாடியவை



திருக்கோவையார் : (வேறு பெயர்கள்):

  • திருச்சிற்றம்பலக் கோவை
  • ஆரணம் (வேதம்)
  • ஏரணம் ( யோகியர்)
  • காமநூல்
  • எழுத்து

 



ஒன்பதாம் திருமுறை ( திருவிசைப்பா)

 

 பேர் பாடியது





பத்தாம் திருமுறை ( திருமந்திரம்)

திருமூலர்

திருமூலர் ஒரு சித்தர்

 

திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை

 

திருமந்திரத்தின் வேறு பெயர்கள்:



  • தமிழ் மூவாயிரம்
  • முதல் சித்த நூல் யோக நெறியை கூறும் தமிழர் நூல்
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்நூலின் சிறப்பு





பதினொன்றாம் திருமுறை

 (பிரபந்த மாலை)

12 பேர் பாடியுள்ளனர்

40 நூல்கள் உள்ளன

  • திருவாலவாயுடையார் (1)
  • காரைக்காலம்மையார் (நான்கு நூல்கள்)
  • கல்லாடர் (1)
  •  நக்கீரர் (10)
  • கபிலர் (3)
  • பரணர் (1)
  • அதிரா அடிகள் 1
  • இளம்பெருமான் அடிகள் (1)
  • ஐயடிகள் (1)
  • சேரமான் பெருமான் நாயனார் (3)
  • பட்டினத்தார் (5)
  • நம்பியாண்டார் நம்பி (ஒன்பது நூல்கள் )
    • தமிழ் வியாசர்  என அழைக்கப்படுபவர் நம்பியாண்டார் நம்பி
    • 64 நாயன்மார்களை பற்றி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்




 

 

 

 

காரைக்கால் அம்மையார்

இயற்பெயர் புனிதவதியார் (இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்)

காரைக்கால் - வணிக மரபினர்

சைவ சமயத்தின் பத்தி நூல்களில் மிகவும் பழமை வாய்ந்தது இவர்தம் நூல்கள்

ஒரு பொருளை பல பாடல்கள் பாடும் முறை

அந்தாதி மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்

சைவசமய எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடி





12ம் திருமுறை (பெரியபுராணம்)

சேக்கிழார்



இயற்பெயர் அருண்மொழித்தேவர்

ஊர் குன்றத்தூர்

வேளாளர் மரபினர்



சிறப்பு பெயர்கள் :

  •  உத்தம சோழப் பல்லவன்
  • தொண்டர் சீர் பரவுவார்
  • அநபாய சோழனிடம் அமைச்சராக இருந்தவர்

 



நூலின்  வேறு சிறப்பு பெயர்கள்

  • திருத்தொண்டர் புராணம் (சேக்கிழார் வைத்த பெயர்)
  • திருத்தொண்டர் மாக்கதை

 



சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகை  முதல் நூல்

 நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி வழிநூல்

சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் சார்பு நூல்



பெரியபுராணம் நூல் சிறப்புகள்:

இரண்டு காண்டம் 13 சருக்கம் 4286 பாடல்கள்

திருமலைச் சருக்கம் முதல் வெள்ளானைச் சருக்கம் வரை



உலகெலாம் என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்க பாடப்பட்ட நூல்

முதல் கள ஆய்வு நூல் பெரியபுராணம்

தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் பெரியபுராணம்

தமிழ் நூலை வடமொழியில் இருந்து மீட்ட நூல் பெரியபுராணம்



பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ  - மீனாட்சி சுந்தரம்



 63 நாயன்மார்களில் மூவர் பெண்கள்

  • காரைக்கால் அம்மையார்
  • இசைஞானியார்
  • மங்கையர்க்கரசி

ஏழாம் வகுப்பு தமிழ்

 தமிழின் சிறப்புகள்      கொல்லாமை - தமிழின் குறிக்கோள்       பொய்யாமை -  தமிழின் கொள்கை  தமிழறிஞர் கவிஞர் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முக...